தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்த்திக்கு சோதனை மேல் சோதனை

Go down

கார்த்திக்கு சோதனை மேல் சோதனை Empty கார்த்திக்கு சோதனை மேல் சோதனை

Post  ishwarya Tue Mar 26, 2013 5:05 pm



நடிகர் கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படம் அனைத்து கட்டப் பணிகளையும் முடித்துவிட்டு படப்பிடிப்பிற்கு துவங்கும் போது, தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கியது. இதனால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்த நிலையில், நேற்று படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டோம் என்று கேமரா யூனிட் சார்பில் கூறப்பட்டது.

இது என்ன புது பிரச்சினை என்று விசாரித்தால், பருத்தி வீரனை முறையான அனுமதி பெறாமல் தெலுங்கில் வெளியிடக் கூடாது என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் மீது இயக்குநர் அமீர் புகார் அளித்துள்ளார்.

அமீர் கே.இ.ஞானேவல் மீது புகார் அளித்துள்ளதால், இப்பிரச்னையில் ஒரு முடிவு தெரியாமல் எங்களால் இப்படத்தில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்துவிட்டது கேமரா யூனிட்.

படத்தின் தயாரிப்பாளர் ராஜா இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையிட்டும், சரியான முடிவு காணப்படவில்லை.

இதனால், இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் அலெக்ஸ் பாண்டியன் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்ந்தால் சிக்கல் ஏற்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum