தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்கள்-சாமுத்ரிகா ஜாதகம்

Go down

 ஆண்கள்-சாமுத்ரிகா ஜாதகம் Empty ஆண்கள்-சாமுத்ரிகா ஜாதகம்

Post  oviya Sun Mar 24, 2013 7:22 pm

தலை – ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந் தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் பு டைத்து இருப்பின் தரித் திரம்.

2. நெற்றி – அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற் றி அமைந்திருப்பின் ஞா னமும் செல்வமும் உ ண்டு. மிகச் சிறுத்திருப் பின் மூட னாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதி ர்ஷடம் உண் டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.



3. கண் – ஆண்களின் கண்கள் சிவந்து, வி சாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக் கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப் பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக் கும்.

4. மூக்கு-உயரமாய், நீண்டு, கூரிய முனை யோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர் ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்தி ரமாம்.

5. வாய் – அழகான,சிறிய வாய் உடைய வர்கள் புத்தி, சக்தி, கரு ணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்ப வர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..

6. உதடு – உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந் து, தடித்து இருப்பின் கபடம் நிறை ந்திருக்கும்.

7. கழுத்து – ஆண்களின் கழுத்து பரு த்தும், மத்திம உயரம் உடையதாக வும் இருப்பின் அதிர்ஷடமாம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாக வோ, நரம்புகள் தெரியும்படியோ இ ருந்தால் வறுமை யாம்.



8. தோள் – தோள்கள் இரண்டும் உய ர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ் ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண் டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த கா ரியம் முடியாது.

9. நாக்கு – நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நா க்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளி கள் இருப்பின் சொன் ன சொல் பலி க்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷ டமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந் தும் இருப்பின் தரித்திரமாம்.

10. பல் – மெல்லிய ஒடுக்கமான பற்க ளை உடையவர்கள் கல்வி மான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதி கம் வரும். வரி சை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்..

11. காது – காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங் கியிருப்பின் கபட தாரி.

12. கைகள் – நீளமான, சீரான பரு மன் உடைய கைளை உடையவ ர்கள் சிறப்பாக வாழ்வர். முழங் கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட் டையான கைகளை உடையவர் களை நம் புதல் கூடாது. கைப்பி ணைப்புகளில் மூட்டுகளில் ஓ சை எழுப்பி னால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தி யாசமாக இருப்பின் பாவிகளா க இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப் பின் செல்வந்தன் ஆவான்.

13.மணிக்கட்டு – மணிக்கட்டில் சதையிலி ருந்து கெட்டியாக இருப் பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்தி ரமின்றி இருந்தாலும், மடக்கும்போது சப் தம் வந்தாலும் தரித்திரமாம்.



14. விரல்கள் – கைவிரல்கள் நீளமாக இருந் தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திர மாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந் தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்தி ருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கை யின் நான்கு மூலைகளும் சம மான உயர த்தோடு தட்டையாக இருப்பின் அரசனா வான்.

15. மார்பு – ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாக வும், ஒன் றோடொன்று நெருங்கியும் இ ருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங் களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதி கம் இருக்கும்..

16. வயிறு – பானை போன்ற உருண்டையா ன வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண் டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற் றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.

17.முதுகு – சமமான முதுகைப் பெற்றவர் கள் எதிலும் வெற்றி பெறு வர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமா கும்.



18. கால்கள் – கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.

19. கால்பாதம் – கால் விரல்கள் ஒன்றோ டொன்று நெருங்கி இருப் பின் புகழ் பெறு வான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அள வாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித் தனியே விலகி யிருந்தாலும் வறுமை வாட்டும்..
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum