தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில்

Go down

ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் Empty ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 11:33 am

ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை நவக்கிரக பரிகார தலங்களில் சனிபகவானுக்குரிய பரிகார தலங்களுள் ஒன்றாக இந்த கோவிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆலயத்தில் சனிபகவானுக்கு நைவேத்தியம் செய்யும்போது, அவருடைய வாகனமான காக்கைகள் கூட்டமாக வந்து அர்ச்சகர் போடும் அன்னங்களை சாப்பிட்டு செல்லும். இந்த நேரத்தில் தோஷ நிவர்த்தி செய்பவர்களும் இந்த ஆலயத்தில் உள்ள காக்கை, மாடு, நாய் - இவற்றிக்கு அன்னம் போடுவர்.

அப்படிச் செய்தால் தோஷங்கள் நீங்கி தங்களுக்கு பாவவிமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். சனிபகவான், சிவபெருமானை வழிபட்டு, பாவ விமோசனத்தைப் பெற்றதால், திருநள்ளாருக்கு அடுத்தபடியாக இங்கு தான் அவர் சின் முத்திரையுடன் காட்சி தருகிறார்.

சிறப்புகள்:

சித்திரை மாதம் 7, 8, 9 தேதிகளில் மட்டும் சூரியன் உதயம் ஆகும்போது, கோவிலின் உள்ளே இருக்கும் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அமைப்புடன் இக்கோவிலின் வடக்குபுற வாசல் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தநேரத்தில் சூரியனே, இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக ஐதீகம்.

போக்குவரத்து வசதி:

சென்னை அனைத்து பகுதியில் இருந்தும் இந்த கோவிலுக்கு செல்ல பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்னை விமான நிலையத்தின் பின்புறம் 2 கிலோமீட்டர் தொலைவிலும், பல்லாவரம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது இந்த கோவில்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum