தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தை வரம் தரும் காசேரி அம்மன் கோவில்

Go down

குழந்தை வரம் தரும் காசேரி அம்மன் கோவில் Empty குழந்தை வரம் தரும் காசேரி அம்மன் கோவில்

Post  meenu Fri Jan 18, 2013 11:30 am

புராணங்கள் செல்வதன்படி, சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. இதேபோல, பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. மேலும், படைக்கும் தொழிலையும் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவர் என கருதினார். இதனால் சிவன் அவரது ஒரு தலையைக் கொய்தார். சிவபாவத்திற்கு ஆளான பிரம்மா, தவறுக்கு மன்னிப்பு கிடைக்க பல தலங்களில் சிவபூஜை செய்தார்.

அவ்வாறு பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. பிரம்மாவிற்கு அருளியதால் சிவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்ம வித்யாம்பிகை எனப்பட்டாள். பூங்குடியாள் என்றும் பெயருண்டு. இக்கோவில் காலப்போக்கில் அழிந்து விட்டது. அதன்பின் புதிதாக கோவில் எழுப்பப்பட்டது. சிவனுக்கு சுந்தரேஸ்வரர் என்றும், அம்பிகைக்கு மீனாட்சி என்றும் பெயர் சூட்டப்பட்டது.

உத்திராடம் நட்சத்திரம் தலம்:

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் பிரம்மபுரீஸ்வரர் கோவில்.ஆடம் என்றால் முதலில் தோன்றியது என்று பொருள். 27 நட்சத்திரங்களில் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் விளங்குகிறது. எனவே தான் முதன் முதலில் தோன்றிய உத்திராட நட்சத்திர தேவியான பூங்குடியாளை 26 நட்சத்திர தேவியரும் பாதபூஜை செய்வதாக கூறப்படுகிறது. (உத்திராடம் முதல் நட்சத்திரம் என்பதால் தான், இந்த நட்சத்திரத்தின் அதி தேவதையாக முழுமுதல் கடவுளான விநாயகரை சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்)

உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு ஏற்படும் சகல தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் முன்னேற்றம் பெறவும் அந்த நட்சத்திர நாளில் வந்து வழிபடலாம். அன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு. ஹோமம் நடக்கும். அப்போது அன்றிரவில் பஞ்சமூர்த்திகள் புறப்படுவர். மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கும் நாளில், இங்கும் திருக்கல்யாணம் நடக்கும்.

மார்கழி திருவாதிரையன்று இரவில் அம்பாள் சன்னதியில் அதிகமான பூக்களை நிரப்பி விசேஷ பூஜை நடக்கும். லிங்கோத்பவதார் பூஜை ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்த கோவில் இது. எதிரே தீர்த்தக்குளம் உள்ளது. தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளி முடிந்த ஜடாமுடியுடன் காட்சி தருகிறார்.

இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ பூஜை உண்டு. சிவன் சன்னதிக்கு பின்புறம் கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு திருக் கார்த்திகையன்றும், சிவராத்திரி இரவில் மூன்றாம் காலத்திலும் விசேஷ பூஜை நடக்கும்.

போக்குவரத்து வசதி:

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து சிவகங்கை சென்று பின் அங்கிருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ,.) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடியை அடையலாம். ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.) இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை நேரடி பஸ் வசதி உண்டு
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum