தோஷங்கள் நீங்கும் குழந்தை வரம் தரும் ஸ்ரீமுஷ்ணம் சப்தகன்னிகள்
Page 1 of 1
தோஷங்கள் நீங்கும் குழந்தை வரம் தரும் ஸ்ரீமுஷ்ணம் சப்தகன்னிகள்
சப்தகன்னிகள் கோவில்கள் பல இடங்களில் இருந்தாலும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள சப்தகன்னிகளுக்கு விசேஷ சக்திகள் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. நமக்கு எந்த தோஷங்கள் இருந்தாலும் இங்கு வந்து வணங்கினால் அத்தனை தோஷங்களும் நொடிப்போழுதில் விலகிவிடும் என்று பக்தர்கள் கூறுகின்றனர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகசாமி கோவிலில் இந்த சப்த கன்னிகள் கோவில் அமைந்துள்ளது.
பூவராகசாமியாகிய பெருமாள் பன்றி அவதாரம் எடுத்து இரணியனை அழித்த தலம் தான் ஸ்ரீமுஷ்ணம். இரனியன் 4 வேதங்களையும் எடுத்து சென்று ஒழித்து வைத்து பூமியையும் இருட்டாக செய்து விட்டு பூமிக்கு அடியில் நுழைந்து கொண்டான். இதனால் மக்கள் பெரும் கஷ்டப்பட்டனர்.
இந்த பகுதியில் வாழ்ந்த அம்புஜவல்லி தாயாரும், அவருடைய தோழிகளான சப்த கன்னிகளும் மக்களும் பெருமாளிடம் இரணியனை அழித்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினார்கள். எனவே பெருமாள் பன்றி அவதாரம் எடுத்து மண்ணுக்குள் நுழைந்து சென்று இரணியனை கொன்றார். பின்னர் அம்புஜவல்லி தாயாரை திருமணம் செய்து கொண்டார்.
அப்போது அம்புஜவல்லி தாயார் தனது தோழிகளையும் தன்னுடனேயே வைத்து கொள்ள விரும்பி பெருமாளிடம் வேண்டினார். இதை ஏற்றுகொண்ட பெருமாள் தனது கோவிலிலேயே அவர்களுக்கு இடமளித்தார். அத்துடன்அவர்களுக்கு தோஷங்களை போக்குதல், குழந்தைவரம் தருதல் போன்ற சக்திகளையும் அளித்தார்.
அதன்படி 7 சப்த கன்னியர்களும் இந்த கோவிலில் இடம் பிடித்தனர். அவர்கள் வடக்கு நோக்கி அமர்ந்தபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இங்கு அமர்ந்துள்ள 7 கன்னியர்களுக்கும் ஸ்ரீசாமுண்டி, ஸ்ரீமகேந்திரி, ஸ்ரீமகேஷ்வரி, ஸ்ரீவராகி, ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீகவுமாரி, ஸ்ரீபிராம்கி, என்ற பெயர் உள்ளது.
அவர்கள் குழந்தைவரம் கொடுப்பதால் அவர்களை குழந்தையம்மாள் என்று அழைக்கிறார்கள். குழந்தை இல்லாத தம்பதியினர் இங்கு வந்து வழிபட்டால் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் தினமும் ஏராளமான குழந்தை இல்லாத தம்பதியினர் வழிபட்டு செல்கின்றனர். சப்தகன்னியரை செங்குந்தஇன மக்கள் குலதெய்வமாகவும் வழிபடுகிறார்கள்.
அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 10 நாட்கள் உற்சவ விழா நடத்துகிறார்கள். அப்போது பல்வேறு மாறு வேடங்களை அணிந்து வந்து ஆடிபாடி வழிபாடு செய்கின்றனர். இப்படி செய்தால் தங்கள் குறைகள் அனைத்தும் நீங்கும், தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.
எனவே நேர்த்திகடன் இருந்து மாறுவேடம் போடுகிறார்கள். விருத்தாசலம் மற்றும் சேத்தியாதோப்பு நகரங்களில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீமுஷ்ணம் அமைந்துள்ளது. ரெயிலில் வந்தால் விருத்தாசலத்ததில் இறங்கி செல்ல வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தை வரம் தரும் இயற்கை மூலிகைகள்
» குழந்தை வரம் தரும் சஷ்டி தேவதை விரதம்
» குழந்தை வரம் தரும் பொல்லா பிள்ளையார் கோவில்
» குழந்தை வரம் தரும் காசேரி அம்மன் கோவில்
» குழந்தை வரம் தரும் காசேரி அம்மன் கோவில்
» குழந்தை வரம் தரும் சஷ்டி தேவதை விரதம்
» குழந்தை வரம் தரும் பொல்லா பிள்ளையார் கோவில்
» குழந்தை வரம் தரும் காசேரி அம்மன் கோவில்
» குழந்தை வரம் தரும் காசேரி அம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum