நோய் தீர்க்கும் சித்தாமிர்தக்குள தீர்த்தம்
Page 1 of 1
நோய் தீர்க்கும் சித்தாமிர்தக்குள தீர்த்தம்
மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் பாதையில் வைத்திஸ்வரன் கோவில் திருத்தலம் உள்ளது. சடாயு , முருகன், சூரியன் ஆகியோர் வழிபட்டதால் "புள்ளிருக்கு வேலூர்'' என்ற பெயர் பெற்ற இத்திருத்தலத்தில்தான் இக்கோவிலின் தீர்த்தமாகிய, "சித்தாமிர்தக்குளம்'' உள்ளது.
இத்தலத்தில் தன்வந்திரிபகவான் (சித்தர்) ஜீவ சமாதி ஆகியிருப்பதால் இது நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இவரது சிலை இத்தலத்தில் உள்ளது. இதன் அருகே சடாயு குண்டம் உள்ளது. இதில் உள்ள சாம்பலைப் பூசுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. சடாயு வழிபட்ட லிங்கமும், சாடயுவின் உற்சவ மூர்த்தியும் உள்ளது.
இத்தலத்தின் தீர்த்தமாகிய, "சித்தாமிர்த தீர்த்தம்'' என்பது, சித்தர் கணம் இறைவன் திருமுடியில் அமிர்தத்தால் அபிஷேகம் செய்தபோது, அந்த அமிர்தம் வந்து இதில் கலந்தமையால், இப்பெயரைப் பெற்றது. இந்த தீர்த்தக் குளத்தில் தவளைகள் இருப்பதில்லை.
மேலும் காமதேனு இறைவன் மீது பொழிந்த அபிஷேகத்தில் பால் வழிந்தோடி வந்து இந்த தீர்த்தக் குளத்தில் கலந்தமையால், இதற்கு "கோட்சர தீர்த்தம்'' என்ற பெயரும் உண்டு. இவ்வாலயத்தில் தரப்படும் சந்தனக் குழம்பு உருண்டையை, மருந்துப் பொட்டலம் என்று சொல்வார்கள். இதனை உட்கொண்டு, இங்குள்ள தீர்த்தமாகிய சித்தாமிர்தக் குள நீரைப் பருகி வந்தால் வியாதிகள் யாவும் நீங்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» முத்திரிகிணறு: நோய் தீர்க்கும் அற்புத தீர்த்தம்
» முத்திரிகிணறு: நோய் தீர்க்கும் அற்புத தீர்த்தம்
» நோய் தீர்க்கும் மந்திரங்கள்
» நோய் தீர்க்கும் சந்தனம்
» நோய் தீர்க்கும் ஆடாதோடா
» முத்திரிகிணறு: நோய் தீர்க்கும் அற்புத தீர்த்தம்
» நோய் தீர்க்கும் மந்திரங்கள்
» நோய் தீர்க்கும் சந்தனம்
» நோய் தீர்க்கும் ஆடாதோடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum