தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பலன் தரும் பரிகாரங்கள்

Go down

பலன் தரும் பரிகாரங்கள் Empty பலன் தரும் பரிகாரங்கள்

Post  meenu Sun Mar 24, 2013 1:24 pm


தை மாதம் என்றவுடன் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது தைப்பூசம்தான். உலகமெங்கும் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் 'ஓம்' என்ற பிரணவத்தின் பொருளை போதித்த முருகப்பெருமான் வழிபாடு செய்தால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம்தான் தைமாதமாகும்.

எனவேதான், 'ஆசைகள் நிறைவேற்ற வேண்டுமானால் பூசத்தில் வழிபாடு வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வார்கள். ஐப்பசி மாதம் வரும் சஷ்டி திதியில்தான் முருகன் போராடி வெற்றி பெற்றார். அதற்கு தாய் ஞானவேலை வழங்கிய நல்ல நட்சத்திரம் பூசம் நட்சத்திரம்தான். எனவே பூச நட்சத்திரம் ஒரு போற்றும் நட்சத்திரமாகும். போராட்டமான வாழ்வை பூந்தோட்டமாக்கும் நட்சத்திரமாகும்.

ஒருவர் சுயதொழில் செய்து பணக்காரராக விரும்புவார். மற்றொருவர் நிறைய படித்து பெயருக்கு பின்னால் பல விதமான பட்டங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார். மற்றொருவர் விளையாட்டில் வெற்றி பெற்று வெற்றி வீரனாக விளங்க வேண்டும் என்று நினைப்பார். இன்னும் சிலரோ ஞான மார்க்கத்தில் சென்று ஆன்மிக உலகத்தில் அடியெடுத்து வைக்க விரும்புவர்.

சிலர் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைத்து நிலையான புகழை பெற வேண்டும் என்றுஆசைப்படுவர். அந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற்றி வைப்பது தெய்வ வழிபாடுகள் தான். நமது ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானாதிபதி இருக்கும் நிலையறிந்து அதன் பலம் அறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும்.

இதைக்காட்டிலும் ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் உடனுக்குடன் நற்பலன் காணலாம். அந்த அற்புதமான தைப்பூசத் திருநாளை முருகப் பெருமானை வழிபட்டு கொண்டாட மார்கழி மாதத்திலேயே பக்தர்கள் மாலைபோட்டுக்கொண்டு காலை, மாலை இரு வேளைகளிலும் குளித்து, கவச பாராயணங்களை படித்து வழிபடுவார்கள்.

தைப்பூசத்தன்று ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனிக்கு சென்று அங்கு தங்க ரதத்தில் பவனி வரும் சண்முகநாதப் பெருமானை கோடி பக்தர்கள் தரிசித்து வழிபடுவர். குன்றக்குடி, பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச் சோலை போன்ற ஆலயங்களுக்கு சென்று ஆறுபடை வீடுகளில் அருகில் இருக்கும் கந்தபெருமானை கால்நடையாக சென்று வழிபட்டு வந்தால் ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும்.

நடந்து சென்று தரிசிக்க இயலாதவர்கள் உள்ளூரில் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று அங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானை வழிபட்டு வரலாம். பன்னிரு கரத்தாலும் அவன் அள்ளிக்கொடுப்பதால்தான் வள்ளல் என்று அழைக்கிறார்கள். பூசநட்சத்திரத்தன்றுதான் சூரபத்மனை வென்று மயிலும், வேலுமாக மாற்றினார்.

பூசத்தன்று முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் எந்த நாளும் இனியநாளாக அமைவதோடு போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற பூசத்தன்று முழுநாளும் விரதமிருந்து பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ் பாடி கந்தரப்பம் நைவேத்தியம் படைத்து முருகப்பெருமானை வழிபட வேண்டும். கந்தப்பெருமான்சன்னதியில்,.....

தொட்டதெல்லாம் துலங்கவும்,
சொல்லும் சொற்கள் வெல்லவும் பட்ட துன்பம்,
பகை அனைத்தும் மாறவும் வெற்றிவாய்ப்பு
சேரவும் வேலன், வள்ளியோடு நீ சுற்றிவந்து
காக்க வா, சுகம் அனைத்தும் சேர்க்க வா!

என்று பாடுங்கள்.

வள்ளிமணாளன் உங்களுக்கு வரங்களை அள்ளி அள்ளித் தருவான். தெள்ளுதமிழ் முருகன் திருவருளைப் பெறும் விதத்தில் பூசத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். நேசித்தால் முருகப்பெருமான் நினைத்ததை எல்லாம் வழங்குவார்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum