"பய புள்ள' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை
Page 1 of 1
"பய புள்ள' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை
"பய புள்ள' திரைப்படத்தை வெளியிட மாநகர சிவில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த டி. கலைச்செல்வி மனு தாக்கல் செய்திருந்தார். "பய புள்ள' திரைப்படத்தை கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு வெளியிடுவதற்கான விநியோக உரிமையை நான் பெற்றுள்ளேன்.
இதற்கான ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் கையெழுத்தானது. படத்தின் பிலிம் மற்றும் நெகட்டிவ் ஆகியவற்றை படத் தயாரிப்பாளர் இதுவரை எனக்கு தரவில்லை. ஆனால், அந்தப் படம் இம்மாதம் 28-ல் வெளியிடப்படவுள்ளதாக விளம்பரங்கள் வந்துள்ளன.
கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான விநியோக உரிமையை நான் பெற்றுள்ள நிலையில், வேறு யாரும் அந்தப் படத்தை அந்தப் பகுதிகளில் வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று கலைச்செல்வி தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சிவில் நீதிமன்ற நீதிபதி, "பய புள்ள' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து அண்மையில் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை ஜனவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
» விஸ்வரூபம் திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்புவோம்"
» கோச்சடையான் திரைப்படத்தை வாங்கியது ஜெயா தொலைக்காட்சி
» முந்தானை முடிச்சு திரைப்படத்தை ரீமேக் செய்கிறார் பாக்யராஜ்
» இடைக்காலத் தடை… பொங்கலுக்கு வருமா ஆயிரத்தில் ஒருவன்?
» விஸ்வரூபம் திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்புவோம்"
» கோச்சடையான் திரைப்படத்தை வாங்கியது ஜெயா தொலைக்காட்சி
» முந்தானை முடிச்சு திரைப்படத்தை ரீமேக் செய்கிறார் பாக்யராஜ்
» இடைக்காலத் தடை… பொங்கலுக்கு வருமா ஆயிரத்தில் ஒருவன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum