பாரதிராஜா கருத்து : மனக் கவலையில் காஜல் அகர்வால்
Page 1 of 1
பாரதிராஜா கருத்து : மனக் கவலையில் காஜல் அகர்வால்
அதிகம் திமிர் பிடித்தவர் என்று பாரதிராஜா கருத்துக் கூறியதால் மனக் கவலையில் ஆழ்ந்துள்ளார் காஜல் அகர்வால்.
பாரதிராஜாவின் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, தமிழில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகை காஜல் அகர்வால்.
அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையை ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அதாவது, தமிழ் திரைப்படத் துறையில் நாயகர்களைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். நாயகிகளை மதிப்பதே இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு தமிழ் திரைப்பபடத் துறையைச் சேர்ந்த பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் இதனால் எல்லாம் காஜல் அகர்வால் கவலைப்படவில்லை.
காஜல் கூறிய கருத்து பற்றி அறிந்த பாரதிராஜா, காஜல் அகர்வால் ரொம்ப திமிர் பிடித்தவர். அவரை என் படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்று கூறினார். இதனைக் கேட்டதும் காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
தான் அவ்வாறு கூறவில்லை என்றும், தனது கருத்து செய்திகளில் திரித்துக் கூறப்பட்டுவிட்டதாகவும் கூறி தன்னிலை விளக்கம் அளிக்க பாரதிராஜாவைத் தொடர்பு கொள்ள முயன்றார் காஜல் அகர்வால். ஆனால் பாரதிராஜா தரப்பில் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லை.
இதனால் அதிக மன வேதனையில் இருக்கிறால் காஜல் அகர்வால்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ் சினிமா பற்றி கருத்து: பாரதிராஜா ஆவேசத்தால் காஜல் அகர்வால் அதிர்ச்சி
» காஜல் அகர்வாலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் பாரதிராஜா
» கல்யாண சீசனில் காஜல் அகர்வால்
» கல்யாண சீசனில் காஜல் அகர்வால்
» விஜயை புகழ்ந்த காஜல் அகர்வால்
» காஜல் அகர்வாலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் பாரதிராஜா
» கல்யாண சீசனில் காஜல் அகர்வால்
» கல்யாண சீசனில் காஜல் அகர்வால்
» விஜயை புகழ்ந்த காஜல் அகர்வால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum