தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பத்மபூஷன் விருதை ஜானகி புறக்கணித்தது தவறு: ஜேசுதாஸ்

Go down

பத்மபூஷன் விருதை ஜானகி புறக்கணித்தது தவறு: ஜேசுதாஸ்  Empty பத்மபூஷன் விருதை ஜானகி புறக்கணித்தது தவறு: ஜேசுதாஸ்

Post  ishwarya Thu Mar 21, 2013 4:46 pm

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது. "உரிய காலத்தில் தனக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இது காலம் தாழ்த்திய விருது" என்று அதனை வாங்க மறுத்துவிட்டார். இதுகுறித்து தற்போது பின்னணி பாடகர் ஜேசுதாஸ் கருத்து கூறியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: ஜானகி அம்மா மேல எனக்கு பெரிய மரியாதை உண்டு. சின்ன சின்ன ஆட்களுக்கு முன்னாடியே கொடுத்துட்டு நமக்கு தாமதமா தர்றாங்களே என்கிற அவுங்க கோபத்துல நியாயம் இருக்கு. ஆனால் அதை வெளிக்காட்டிக்காம விருதை வாங்கியிருக்கணும். ஏன்னா பெரிய ராஜ்யத்திலேருந்து கிடைக்கும் கவுரவமான விருது.

நான் 7 முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கேன். எனக்கு அதோட விதிமுறைகள் தெரியும். விருதுக்கு தேர்வான பிறகு உங்களுக்கு இதை வாங்கிக்க சம்மதமான்னு கேட்பாங்க. அப்படி ஜானகி அம்மாகிட்டேயும் நிச்சயம் கேட்டிருப்பாங்க அப்பவே மறுத்திருக்கலாம். நாம் பாட வரும்போது அவார்ட் கொடுப்பாங்கன்னு பாட வரலை. தட்சிணாமூர்த்தி சாமிக்கு 94 வயசாகுது. இசையில் பெரிய ஜாம்பவான், மேதை அவருக்கு ஒரு அவார்ட்கூட கொடுக்கல. அதற்காக அவரது திறமைய யாராவது குறைச்சி மதிப்பிட முடியுமா.

இவ்வாறு ஜேசுதாஸ் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum