தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விதர்பா, பஞ்சாப் என்ற தூர தேசங்களில் நடந்து வந்த அவலம் இப்போது நம் ஊரிலும் ஆரம்பித்து விட்டது…

Go down

விதர்பா, பஞ்சாப் என்ற தூர தேசங்களில் நடந்து வந்த அவலம் இப்போது நம் ஊரிலும் ஆரம்பித்து விட்டது… Empty விதர்பா, பஞ்சாப் என்ற தூர தேசங்களில் நடந்து வந்த அவலம் இப்போது நம் ஊரிலும் ஆரம்பித்து விட்டது…

Post  meenu Mon Mar 18, 2013 6:48 pm

வட்டிக்கு கடன் வாங்கி, சாகுபடி செய்த சம்பா பயிரை காப்பாற்ற முடியாத கவலையில், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா கூவெட்டான்குடியை சேர்ந்தவர் ராஜாங்கம், 35. இவருக்கு சொந்தமான, ஆறு ஏக்கர் நிலத்தில், சம்பா நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் விஷம் குடித்து, ராஜாங்கம் இறந்து கிடந்தார்.

அக்கம்பக்கத்தினர், வலிவலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், விவசாயி உடலை கைப்பற்றி, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் வராததாலும், போதுமான மழை பெய்யாததாலும் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதித்துள்ளது. அதனால், வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிரை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலையில் ராஜாங்கம் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த காவிரி விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சேரன், பொதுச்செயலாளர் தனபாலன், நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட சுற்றுவட்டார விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர், ராஜாங்கம் வீட்டின் முன் திரண்டனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடந்தது நடந்தபடி... (ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர் நடந்து வந்த பாதை)
» விடுமுறை விடுதி என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் கைது!
» எனக்குத் தலையில் அடிபட்டு விட்டது. மருத்துவமனையில் தையல் போட்டு அனுப்பினார்கள். ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது கண்ணுக்கு வரும் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டது தெரிந்தது. என் வலது கண் பார்வை மீள ஏதாவது பரிகாரம் கூறுங்கள்.
» தென்காசியில் ரோட்டில் நடந்து
» ‘555’ படத்துக்காக நடிகர் பரத் மொட்டை போட்டுக் கொண்டார். ஒரு வருடமாக அவர் வளர்த்து வந்த தாடி, மீசை, மற்றும் நீண்ட தலைமுடிக்கு அவர், ‘குட் பை’ சொன்னார். ‘555’ சொல்லாமலே, பூ, ரோஜாக்கூட்டம், டிசிம் ஆகிய படங்களை டைரக்டு செய்த சசி, ‘555’ என்ற பெயரில், ஒரு புத

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum