தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை: பத்மபிரியா

Go down

சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை: பத்மபிரியா Empty சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை: பத்மபிரியா

Post  ishwarya Sat Mar 16, 2013 4:38 pm

மிருகம்', 'தவமாய் தவமிருந்து', 'பொக்கிஷம்' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பத்மபிரியா. சமீபத்தில் 'நம்பர் 66 மதுர பஸ்' என்ற மலையாள படத்தில் நடித்தபோது தனது மானேஜருக்கு ரூ.2 லட்சம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் நிஷாத் மற்றும் தயாரிப்பாளரிடம் நிர்ப்பந்தித்தார்.

மலையாள பட உலகில் இதுபோன்று கமிஷனுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பத்மபிரியா மீது நிஷாத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். இதையடுத்து படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்தது. பத்மபிரியா தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாக செய்தி வெளியானது.

இதுகுறித்து பத்மபிரியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

என்னைப் பற்றி பத்திரிகைகளில் நிறைய வதந்திகள் பரவி உள்ளது. நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. இரு தரப்பினருக்கும் இடையே சில அசவுகரியங்கள் ஏற்பட்டன. எங்களுக்குள் சரியான தொடர்பு இல்லாமல் போனதால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டன. தற்போது நாங்கள் பேசி பிரச்சினையை சுமூகமாக முடித்து விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மன்னிப்பு கேட்கவில்லை… அசின் மீது நடவடிக்கை நிச்சயம்! – ராதாரவி
» மழை காட்சியில் நடிக்க மினரல் வாட்டர்’ கேட்கவில்லை -நடிகை நிலா
» விஜய் பட நஷ்ட விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடி உதை… ‘கவுன்சில்’ கலாட்டா!
» மீண்டும் பத்மபிரியா: கவுதம்மேனன் படத்தில் நடிக்கிறார்
» மானேஜருக்கு சம்பளம் கேட்டதால் எதிர்ப்பு: சிக்கலில் பத்மபிரியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum