தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆபாசமாக நடித்ததாக புகார் அனுஷ்கா, பிரியாமணி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: கோர்ட் உத்தரவு

Go down

ஆபாசமாக நடித்ததாக புகார் அனுஷ்கா, பிரியாமணி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: கோர்ட் உத்தரவு Empty ஆபாசமாக நடித்ததாக புகார் அனுஷ்கா, பிரியாமணி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: கோர்ட் உத்தரவு

Post  ishwarya Sat Mar 16, 2013 12:01 pm


நடிகைகள் பிரியாமணி, அனுஷ்கா இருவரும் படங்களில் ஆபாசமாக நடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. தெலுங்கு படங்களில் ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியாக நடிப்பதற்கு கண்டனங்களும் எழுந்தன. சமீபத்தில் அனுஷ்கா, பிரியாமணி நடித்த தெலுங்கு படங்கள் ஆந்திராவில் ரிலீசாயின. அப்படங்களில் இருவரும் முந்தைய படங்களில் இல்லாத அளவு தூக்கலான கவர்ச்சி காட்டி இருந்தனர். நீச்சல் உடையிலும் வந்தார்கள்.

ஆந்திராவில் உள்ள சமூக ஆர்வலர் சுபுத்தா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆபாசமாக நடிக்கும் அனுஷ்கா, பிரியாமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஐதராபாத்தில் உள்ள மல்சாஜ் கிரிகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு 10-வது மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை நீதிபதி விசாரணைக்கு ஏற்றார். அத்துடன் சுபுத்தா மனுதொடர்பாக அனுஷ்கா, பிரியாமணி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கும் உத்தரவிட்டார்.

சுபுத்தா இதுகுறித்து கூறும்போது:-

அனுஷ்காவும், பிரியாமணியும் கவர்ச்சியாக நடிப்பதால் இளைஞர்கள் கெட்டுப்போகின்றனர். இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லவும் காரணமாக அமைகிறது. எனவேதான் வழக்கு தொடர்ந்தேன் என்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளதால் அனுஷ்கா, பிரியாமணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum