தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீட்டில் பூஜை செய்ய முடியவில்லையா?

Go down

 வீட்டில் பூஜை செய்ய முடியவில்லையா?  Empty வீட்டில் பூஜை செய்ய முடியவில்லையா?

Post  gandhimathi Thu Jan 17, 2013 2:37 pm



சுமங்கலிபெண்கள் வரலட்சுமி விரதத்தின் போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலி பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும்.

மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வர்யங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். தனியாக வீட்டில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அருகில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் வரலட்சுமி பூஜைகளில் கலந்தும் விரதம் அனுஷ்டிக்கலாம்.

பெரும்பாலான இந்திய நாட்டவர்கள் வீட்டில் கும்பம் வைத்து வழிபடுகின்றனர். ஆனால் இலங்கையில் அனேகமானோர் அம்பிகை ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் விசேஷ பூஜைகளில் பங்கு பெற்று தம் விரதத்தை நிறைவேற்றுகின்றனர்.

உள்ளத்தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட லட்சுமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்து விடும்
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum