தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பட பட்ஜெட் அதிகமான விவகாரம் ராகவா லாரன்ஸுக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திடீர் உத்தரவு

Go down

பட பட்ஜெட் அதிகமான விவகாரம் ராகவா லாரன்ஸுக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திடீர் உத்தரவு  Empty பட பட்ஜெட் அதிகமான விவகாரம் ராகவா லாரன்ஸுக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திடீர் உத்தரவு

Post  ishwarya Thu Mar 14, 2013 3:21 pm

ஐதராபாத் : தமன்னா, பிரபாஸ் நடித்த தெலுங்கு படம், ‘ரிபெல்’. இதை பகவான், புல்லா ராவ் ஆகியோர் தயாரித்தனர். ராகவா லாரன்ஸ் இயக்கிய இந்த படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போதே தயாரிப்பாளர்களுக்கும் லாரன்ஸுக்கும் பிரச்னை ஏற்பட்டது. சொன்ன பட்ஜெட்டை மீறி லாரன்ஸ் செலவழித்துவிட்டார் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பட ரிலீஸுக்கு முன்பே புகார் செய்தனர். அதில், ‘ரிபெல் படத்தை 22.5 கோடியில் முடித்து தருவதாக லாரன்ஸ் ஒப்பந்தம் போட்டிருந்தார். ஆனால், தேவையற்ற செலவுகளால் படத்தை 35 கோடிக்கு மேல் இழுத்துவிட்டுவிட்டார்.

இதனால் எங்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதிகமாக செலவழித்த பணத்தை லாரன்ஸ் திருப்பித் தரவேண்டும்’ என்று கூறியிருந்தனர். இதுபற்றி விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், லாரன்ஸ் சொன்ன பட்ஜெட்டான 22.5 கோடி ரூபாயில் பத்து சதவிகிதத்தை, அதாவது 2.5 கோடி ரூபாயை தயாரிப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவு தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பணத்தை லாரன்ஸ் கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தெலுங்கு சினிமா துறையினர் தடை விதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராகவா லாரன்ஸுக்கு ரூ.2.5 கோடி அபராதம் விதித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம்
» விஸ்வரூபம் விவகாரம் : விஷாலுக்கு நடிகர் சங்கம் திடீர் நோட்டீஸ்
» அஜீத் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் மன்னிப்பு தெரிவிக்க சரத் வலியுறுத்தல்
» சிங்கமுத்து விவகாரம்: விளக்கம் தர வடிவேலுவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
» சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்: குஷ்பு ராஜினாமா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum