தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புத்தகம் காட்டி பாலியல் துஸ்பிரயோகம்..!

Go down

புத்தகம் காட்டி பாலியல் துஸ்பிரயோகம்..! Empty புத்தகம் காட்டி பாலியல் துஸ்பிரயோகம்..!

Post  meenu Wed Mar 13, 2013 4:59 pm

அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் பாரதி (25). விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தும் கலைக்குழுக்களில் தவில் கலைஞராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், அவருடைய வீட்டின் அருகில் உள்ள 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் பெயரை சொல்லி அவருடைய வீட்டில் இருந்து அழைத்தார்.

இதைக் கேட்ட அந்த மாணவி, பாரதியின் வீட்டின் அருகே சென்றார். அப்போது பாரதி அந்த மாணவியிடம், உனக்கு ஒரு புத்தகம் வாங்கி வந்துள்ளேன். அதை வாங்கிக்கொண்டு உடனே திரும்பி வந்துவிடு என்றார். இதை நம்பிய அந்த மாணவி, புத்தகத்தை வாங்க பாரதியின் வீட்டின் அருகே சென்றார்.

அப்போது பாரதி, அந்த மாணவியை தன்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் காலியாக உள்ள ஒரு குடிசை வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியின் வாயை பொத்தி, கீழே தள்ளி அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பாரதியின் பிடியில் சிக்கி தவித்த மாணவி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறி துடித்தார். அவருடைய சத்தத்தை கேட்டு, வீட்டுக்குள் இருந்த மாணவியின் தந்தை, வெளியே ஓடிவந்து சத்தம் வந்த குடிசையை நோக்கி ஓடி சென்று பார்த்தார். அதற்குள் பாரதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது பற்றிய புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைகாக சேலம் மருத்துவ கல்லூரி அரசு மரு‌த்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். தப்பி ஓடிய பாரதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum