தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் கண்ணீர்

Go down

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் கண்ணீர்  Empty ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் கண்ணீர்

Post  ishwarya Wed Mar 13, 2013 2:55 pm

சென்னை : ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் கண்ணீர்விட்டு அழுததால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. பாண்டிராஜ் இயக்கி வரும் படம், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் சமீபத்தில் திருச்சி அருகே நடந்தது. அப்பாவுக்கும் மகனுக்குமான வசன காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அப்போது அப்பா ஆவதற்கு தான் பட்ட கஷ்டங்களை அப்பாவாக நடித்த மனோஜ்குமார், சிவகார்த்திகேயனிடம் சொல்வார். அதைக் கேட்டு சீரியசாக நின்றுவிட்டு சிரித்தபடி அவர் ஓட வேண்டும். ஆனால், இந்தக் காட்சியில் நடித்தபோது சிரிப்பதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் ஏங்கி ஏங்கி அழுதுவிட்டார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி பட யூனிட்டில் விசாரித்தபோது, ‘‘அந்த காட்சி உருக்கமானதாக இருக்கும். அப்பாவாக நடித்த மனோஜ்குமார் பேசும்போது, தனது தந்தை ஞாபகத்துக்கு வந்ததாகச் சொல்லி சிவகார்த்திகேயன் அழுதுவிட்டார். பிறகு இயக்குனர் அவரை சமாதானப்படுத்தினார். சில மணி நேரத்துக்குப் பிறகு அந்தக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது’’ என்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum