தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாரிசு நடிகைகள் ஜொலிக்காதது ஏன்?

Go down

வாரிசு நடிகைகள் ஜொலிக்காதது ஏன்?  Empty வாரிசு நடிகைகள் ஜொலிக்காதது ஏன்?

Post  ishwarya Tue Mar 12, 2013 5:12 pm

சென்னை : நடிகர், நடிகைகளின் வாரிசுகள் மீண்டும் சினிமாவுக்கே வருவது காலங்காலமாக நடந்து வரும் விஷயம். சிவாஜி, பிரபு, முத்துராமன், கார்த்திக், சிவகுமார், சூர்யா, கார்த்தியில் இருந்து ஏராளமான உதாரணம் உண்டு. இவர்கள் தங்களை நிலைநிறுத்த கடுமையாகப் போராடினார்கள் என்பது உண்மை. ஆனால், வாரிசு நடிகர்கள் ஜொலித்தது போல, நடிகைகள் ஜொலிக்காதது சினிமா வட்டாரத்தில் பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது.

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், ராதா மகள்களான ‘கோ’கார்த்திகா, ‘கடல்’ துளசி, சரத்குமார் மகள் வரலட்சுமி, பாக்யராஜ் மகள் சரண்யா, சுமித்ரா மகள்கள் உமா, நட்சத்ரா உள்ளிட்டோர் சினிமாவில் பெரிய இடத்தை இன்னும் பிடிக்க வில்லை. பெரும் ஆரவாரத்தோடு சினிமாவில் அறிமுகமான இவர்கள், ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்காதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ருதி ஹாசன் ‘7ஆம் அறிவு’, ‘3’ படங்களில் நடித்தார். ஆனால், தெலுங்கில் நடித்த ‘கப்பார் சிங்’தான் அவருக்கு பெரிய ஹிட்டை கொடுத்துள்ளது. கார்த்திகாவும் ராதா மகள் என்ற இமேஜோடு தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். ‘கோ’ ஹிட்டானாலும் கூட பெரிய இடத்துக்கு அவரால் வர முடியவில்லை. அதுபோலத்தான் வரலட்சுமியும். அவர் நடித்த ‘போடா போடி’ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. சரண்யா இப்போது நடிப்பதை விட்டுவிட்டார்.

‘‘வாரிசு நடிகைகள் என்று இல்லை. பொதுவாக நடிகைகள் சிறந்த கதைகளை தேடிப் போவதில்லை. பிரமாண்டத்தை தேடித் தான் போகிறார்கள். அவர்கள் கதை கேட்பதே அதில் முத்தக்காட்சி இருக்கிறதா, பிகினி உடை காட்சி இருக்கிறதா என்பதற்காகத்தான். அப்படியிருந்தால் நடிக்க மாட்டேன் என்றும் அவர்கள் சொல்வதில்லை. சம்பளத்தை அதிகமாக்கலாம் என்றுதான் பார்க்கிறார்கள். அவர்கள் சிறந்த கதைகளை தேடி நடித்தால் கண்டிப்பாக ஜொலிக்கலாம்’’ என்கிறார், கால்ஷீட் மானேஜர் ஒருவர்.

‘‘வாரிசு நடிகர்கள் சிறந்த கதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்காக அவர்கள் மெனக்கெடுகிறார்கள். அதனால்தான் அவர்களால் வெற்றிப் படங்களை கொடுக்க முடிகிறது. வாரிசு நடிகைகள் பெரிய பேனர், பெரிய இயக்குனர், பெரிய ஹீரோ இதைத்தான் பார்க்கிறார்கள். ‘மைனா’ என்ற வெற்றிப்படம்தான் இன்று பிசியாக இருக்கும் அமலா பாலையும், ‘களவாணி’ படம் ஓவியாவையும் தந்தது என்பதை வாரிசு நடிகைகள் உணரவேண்டும்’’ என்கிறார், பாதிக்கப்பட்ட இயக்குனர் ஒருவர்.

‘‘ஸ்ருதி ஹாசன், கார்த்திகா, துளசி, வரலட்சுமி போன்றோர் அதிக படங்களில் நடிக்கவில்லை. ஒன்றிரண்டு படங்களில்தான் நடித்துள்ளனர். அதற்குள்ளாகவே அவர்கள் ஜொலிக்கவில்லை என்று சொல்லி விட முடியாது. அவர்கள் நடிப்பில் இன்னும் சில படங்கள் வந்த பிறகே அதைப் பற்றி பேச முடியும்’’ என்கிறார்கள் சிலர்.
‘‘வாரிசு நடிகைகளை விடுங்கள். தமிழ் பேசும் நடிகைகள் கிடைப்பதே இங்கு பிரச்னையாக இருக்கிறது. சினிமா பற்றிய தவறான கண்ணோட்டத்தில் அவர்கள் வரத் தயங்குகிறார்கள். ஆனாலும் வாரிசு நடிகைகள், வாரிசு நடிகர்களை ஜெயிக்கும் காலம் வரலாம்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார், ஒரு முன்னணி தயாரிப்பாளர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum