தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

Go down

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு Empty மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

Post  meenu Fri Mar 08, 2013 1:30 pm

திருவனந்தபுரம்: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதையொட்டி சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாள் மண்டல கால பூஜைகள் கடந்த 26ம் தேதி நிறைவடைந்தன. அன்று இரவு 10 மணி அளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. 27ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 3 நாள் கோயில் நடை சாத்தப்பட்டிருந் தது. இந்த 3 நாட்களிலும் பக்தர்கள் யாரும் சன்னிதானத் துக்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மாலை 5.30 மணி அளவில் தந்திரி கண்டரர் ராஜுவரர் முன்னிலையில் மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரி கோயில் நடையை திறந்தார். அப்போது அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று கோஷமிட்டனர். நேற்று வேறு சிறப்பு பூஜை எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்அபிஷே கம் உட்பட சிறப்பு பூஜைகள் தொடங்குகின்றன. ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது. அன்று மாலை மகர
ஜோதி தரிசனம் நடைபெறும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum