தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா

Go down

திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா Empty திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா

Post  meenu Fri Mar 08, 2013 1:29 pm

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை திருப்படி திருவிழா தொடங்கியது. மலைகோயில் படிகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ம் தேதி படி பூஜையும், மறுநாள் புத்தாண்டு சிறப்பு வழிபாடும் நடக்கும். படி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபடுவர். இந்த ஆண்டு படி பூஜை விழா, இன்று காலை தொடங்கியது.

காலை 9 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளக்கரையில் இருந்து ஓதுவார் சாமிநாதன் தலைமையில் பக்த¤ இசை கச்சேரி குழுவினர் திருப்புகழ் பாடி சென்றனர். கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி படித் திருவிழாவை தொடங்கி வைத்தனர். பூஜைகளை நரசிம்மசாமி கோயில் குருக்கள் துரைராஜ் தொடங்கி வைத்தார். இதன்பிறகு, ஒவ்வொரு படிக்கட்டிலும் தேங்காய், பழம் உடைத்து திருப்படிகள் தோறும் திருப்புகழ் பாடியபடி பக்தர்கள் சென்றனர். கோயில் மேலாளர்கள் பழனி, பெத்தபெருமாள், நகராட்சி பொறியாளர் சண்முகம், இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நாளை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருப்படி திருவிழா, ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இன்று காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். விழாவையொட்டி
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum