தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வளம் தரும் வற்றல் யாகம்

Go down

 வளம் தரும் வற்றல் யாகம் Empty வளம் தரும் வற்றல் யாகம்

Post  meenu Fri Mar 08, 2013 1:06 pm

மதுரை-திருநெல்வேலி ரயில் பாதையில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கி, கயத்தாறு செல்லும் சாலையில் பயணித்து தளவாய்புரத்தை அடைந்து அங்கிருந்து ஒரு கி.மீ. சென்றால் கே.சிவஞானபுரத்தில் அழகிய திருவடிவில் துர்க்கையை தரிசிக்கலாம். நான்கு கரங்களுடன் கிழக்கு நோக்கி சாந்த சொரூபிணியாக வீற்றிருக்கிறாள் அன்னை. சண்டி யாகமும், பிரத்யங்கரா யாகமும் இங்கே செய்யப்படும்போது பக்தர்கள் கூட்டம் பிரமிக்க வைக்கும். சண்டி யாகம் வருடத்திற்கு ஒரு முறை மிக பிரமாண்டமாக நடக்கும்.

பௌர்ணமி தினத்தன்று, வியாபாரம் செழித்தோங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், தீய சக்திகள் அகலவும் வேண்டி பிரத்யங்கரா யாகம் நடத்தப்படுகிறது. 12 அடி ஆழம் கொண்ட யாக குண்டத்தின் முன்பு கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தேறுகின்றன. இவற்றைத் தொடர்ந்து வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க, மிளகாய் யாகம் துவங்குகிறது. யாககுண்டத்திற்குள் கொட்டப்பட்ட மிளகாய் வற்றல் 15 அடி உயரத்திற்கு தீ ஜுவாலையுடன் கொழுந்து விட்டு எரிகிறது.

கூடை, கூடையாக மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் செய்யப்பட்டாலும் யாருக்கும் சிறு கமறல் கூட ஏற்படுவதில்லை. தொடர்ந்து மூன்று முறை இந்த பிரத்யங்கரா யாகத்தில் கலந்து கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இந்த யாகத்திற்கு நிகும்பலா யாகம், வத்தல் யாகம் என வேறு பெயர்களும் உண்டு. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இத்தல நாயகியான துர்க்கா பரமேஸ்வரியை 13 வாரங்களுக்கு விளக்கேற்றி வேண்டிக் கொண்டால், குழந்தைபேறு கிட்டும்; வியாபாரம் விருத்தியடையும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum