தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கை அரசின் சதி - ஆர்.கே.செல்வமணி எச்ச‌‌ரிக்கை அறிக்கை

Go down

இலங்கை அரசின் சதி - ஆர்.கே.செல்வமணி எச்ச‌‌ரிக்கை அறிக்கை Empty இலங்கை அரசின் சதி - ஆர்.கே.செல்வமணி எச்ச‌‌ரிக்கை அறிக்கை

Post  ishwarya Thu Mar 07, 2013 5:38 pm


இலங்கை அரசு தமிழ் திரைத்துறையினரை வஞ்சகமாக பயன்படுத்த நினைக்கிறது, அதற்கு பலியாக வேண்டாம் என்று எச்ச‌‌ரித்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை வருமாறு...

இப்பூமிப் பந்தில் தமிழன் என்றொரு இனம் இருப்பதற்கு அடையாளமாக இருப்பவர்கள் யாரென்றால் ஈழத்திலே புறநானுற்றைப் புரட்டிப்போட்ட 4, மேற்பட்ட அந்த மாவீரர்கள்தான்.

ஈழத்திலே தமிழர்களின் உ‌‌‌ரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தமிழ்பெண்ணின் மானத்தை காப்பதற்காகவும் தன்னுயிர் ஈந்த அந்த வீரர்களின் அளப்ப‌‌ரிய தியாகங்களை ஆண்டுதோறும் நினைவுக்கூரும் மாதந்தான் நவம்பர் மாதமாகும்.

பல்வேறு இயக்கங்களை சேர்ந்த இந்த மாவீரர்கள் கடந்த 50 வருடங்களாக ஈழத்தமிழர் விடுதலைக்காகவும், நம் சந்ததியின் சுதந்திரத்திற்காகவும் தங்களின் இளமைக்கனவுகளையும், உற்றார்-பெற்றாரையும் மறந்து தங்களேயே ஆகுதியாக்கி வீரகாவியமானவர்கள் ஆவார்கள்.

வாழவேண்டிய வயதிலே அன்பு மனைவியையும், ஆருயிர்க் கணவனையும், மழலைச் செல்வங்களையும் மறந்து மண்விடுதலைக்காக மரணித்திருக்கின்றார்கள். இப்படி ஆணும் பெண்ணும் ச‌‌ரிசமனாக வீரத்துடன் போராடி காற்றோடு காற்றாகக் கலந்துபோன மாவீரர்களைப் போற்றுகின்ற மாதந்தான் நவம்பர்மாதம் இந்த நவம்பர் மாதத்திலே ஈழத்தமிழர் மாத்திரமன்றி உலகத்தமிழர்கள் அத்தனைபேரும் நவம்பர் மாதத்தை தியாகமானதாகவும், வீரமானதாகவும் வணக்கத்திற்கு‌‌‌ரிய மாதமாகவும் போற்றி வருகின்றார்கள். மாண்டுபோன மாவீரர்களின் நினைவுகளை தம் இனத்திற்கும், சந்ததியினருக்கும் அவர்கள் இரத்தத்திலே ஊற்றி வருகின்றனர்.

இந்த நவம்பர் மாதத்திலே உலகத் தமிழினம் எந்தவொரு இசைவிழாக்களையும், களியாட்ட விழாக்களையும் கொண்டாடி மகிழ்வதில்லை இம்மாத்தில் அனைத்துக் களியாட்ட விழாக்களையும் புறக்கணித்து புனிதமான மாவீரர்களைப் போற்றுகின்ற மாதமாகப் போற்றுகின்றது ஆனால், இலங்கை அரசாங்கம் இந்த மாவீரர்களின் மாதத்தை மறக்கடிக்க முயல்கிறது. துரோகிகளை பயன்படுத்தி களியாட்டங்களை நடத்தி வீரநிகழ்ச்சிகளை மறக்கடிக்க முயல்கிறது. இதற்காக தமிழ்திரைப்பட துறையே கூட வஞ்சகமாக அவர்களுக்கு தெ‌ரியமாக பயன்படுத்திக் கொள்ள துடிக்கிறது.

இதற்காக கருணாவைப்போல், கே.பி யைப்போல் ஈழ தமிழர்களே சில துரோகிகளை பயன்படுத்தி தமிழ்திரைப்பட துறையை விலைபேச நினைக்கிறது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயா‌‌‌ரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்க உ‌‌‌ரிமையாளர்கள் சம்மேளனம் என திரைப்பட துறையின் அனைத்து பி‌‌‌ரிவினரும் இதுவரை அனைத்து ஈழதமிழர்களுக்கான அனைத்து போராட்டங்களிலும் தோளோடு தோள்நின்று போராடி வந்திருக்கின்றோம். ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ்திரைபடதுறை மாவீரர்களின் நினைவுகளை மறக்கடிக்க நினைக்கின்ற இலங்கை அரசின் இந்த சதிக்கு பலி ஆகிவிட கூடாது என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கை அரசு ஆர்கே செல்வமணி தமிழ் திரையுலகம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» துப்பாக்கி - ஏ.ஆர்.முருகதாஸ் விடுக்கும் எச்ச‌ரிக்கை
» பிராய்லர் சிக்க‍ன் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் கெடுதல்கள் – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்
» ஆர்.கே.செல்வமணி நடிப்பதை மறைக்கும் இமயம்!
» பாரதிராஜாவின் 'அன்னக்கொடி'யில் ஆர்.கே.செல்வமணி!
» இலங்கை இசை நிகழ்ச்சி ரத்து: பாடகர் மாணிக்க விநாயகம் அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum