தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...

Go down

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா... Empty இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...

Post  ishwarya Mon Mar 04, 2013 12:15 pm

பாலகுமாரனின் விசிறிகளுக்கு இந்த டயலாக் அத்துப்படி. அவர்தான் தன்னை வைத்து இப்படியொரு விஷயத்தை எழுதினார்.

சினிமாவில் இயக்குனராகும் ஆசையில் வந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு கதை விவாதத்தில் கிடைத்த மரியாதை படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கவில்லை. ஆசை சீக்கிரத்தில் சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்று மாற வசனம் எழுதுவதோடு நிறுத்திக் கொண்டார். இந்த கசப்பான அனுபவத்தை அவர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று எழுதினார். வெல், இந்த பழங்கதை இப்போது எதற்கு என்றுதானே பார்க்கிறீர்கள். காரணம் இருக்கிறது.

ரௌத்திரம் படத்தை இயக்கிய கோகுல் அடுத்து இயக்கும் படத்தின் பெயர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. பாலகுமாரனிடம் அனுமதி பெற்று இந்த பெயரை வைத்தார்களா, பாலகுமாரனின் சினிமா அனுபவம்தான் இந்தப் படத்தின் கதையா... பல கேள்விகள்.

இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க சுவாதி, நந்திதா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். மதன் கார்க்கி படத்தின் வசனத்தை எழுதுகிறார். முதல் படத்தில் ரௌத்திரம் பழகிய கோகுல் இதில் நகைச்சுவை பழகுகிறார். ஆம், முழுக்க நகைச்சுவையுடன் இப்படம் தயாராகிறது. ஒருவர் காலை இன்னொருவர் வாரி விடுவதுதான் படத்தின் மையமாம்.

ம்... கேட்க நல்லாத்தான் இருக்கு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum