தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகிஸ்தான் இராணுவம் சுட்டதில் இரு இந்தியப் படையினர் மரணம்

Go down

பாகிஸ்தான் இராணுவம் சுட்டதில் இரு இந்தியப் படையினர் மரணம் Empty பாகிஸ்தான் இராணுவம் சுட்டதில் இரு இந்தியப் படையினர் மரணம்

Post  meenu Sat Mar 02, 2013 1:37 pm

பாகிஸ்தானப் படையினர் சர்ச்சைக்குரிய காஷ்மீர்
பகுதியில் , நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் கட்டுப்பாட்டுக்
கோட்டைக் கடந்து, இந்தியக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நுழைந்து இந்தியப்
படையினர் இருவரை சுட்டுக்கொன்றதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தான் ராணுவம் இது போன்றதொரு குற்றச்சாட்டை இந்தியாவுக்கு எதிராக சுமத்தியிருந்தது.

அந்த
சம்பவத்தில், இந்தியப் படையினர் தனது நிலப்பரப்புக்குள் நுழைந்து ராணுவச்
சாவடி ஒன்றைத் தாக்கி, சிப்பாய் ஒருவரைக் கொன்றதாக பாகிஸ்தான்
கூறியிருந்தது.

ஆனால் இந்தியாவோ, இது ஒரு துப்பாக்கிச் சூடு
பரிமாறப்பட்ட சம்பவம் ஆனால் தனது படைகள் கட்டுப்பாட்டுக் கோட்டை
கடக்கவில்லை என்று கூறியது.

எல்லைக்கு ஊடாக நடத்தப்படும் துப்பாக்கிச் சூடு என்பது சாதாரணமாக நடப்பதுதான் ஆனால், ராணுவ ஊடுருவல்கள் அபூர்வமாகவே நடக்கின்றன.

காஷ்மீரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு
நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இந்தப் பிரச்சினை இந்த இரு நாடுகளிடையே
பதற்ற நிலை தொடர்வதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்துவருகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum