தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் தடைக்கு, தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை'- ஜெயா

Go down

விஸ்வரூபம் தடைக்கு, தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை'- ஜெயா Empty விஸ்வரூபம் தடைக்கு, தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை'- ஜெயா

Post  meenu Sat Mar 02, 2013 1:17 pm

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, விஸ்வரூபம் திரைப்படம்
வெளியிடப்படுவதற்கு எதிராக தமிழக அரசு விதித்த தடை,மாநிலத்தில் சட்டம்
ஒழுங்கு காரணங்களாலேயே விதிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

இந்தத் தடை விதித்ததற்கு உள்நோக்கம் எதுவும்
இல்லை, , தனக்கு நடிகர் கமல்ஹாசன் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதுமில்லை
என்றும் அவர் இன்று வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர் சந்திப்பில்
கூறினார்.

எதிர்ப்பு
தெரிவித்து வரும் முஸ்லீம் அமைப்புக்களுடன் பேசி சுமுகத்தீர்வு காண கமல்
தரப்பினர் முன்வந்தால் தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும்
முதல்வர் கூறினார்.

விஸ்வரூபம் தொடர்பான பிரச்சினைகள் அகில இந்திய
அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த
ஜெயலலிதா பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். பொதுவாகவே ஆங்கிலத்தை
தாராளமாகக்க் கலந்தே செய்தியாளர் சந்திப்பில் பேசுவது அவரது
வழக்கமென்றாலும் இன்று ஏறத்தாழ முற்றிலுமாகவே ஆங்கிலத்தில் பேசியது
திரைப்படத்தின் மீதான தடையினை கடுமையாக விமர்சனம் செய்துவரும் ஆங்கிலத்
தொலைக்காட்சி சானலுகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே என நோக்கர்கள்
கூறுகின்றனர்.




விஸ்வரூபம் தடைக்கு, தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை'- ஜெயா 120307140650_jayalalithaa_tamilnadu_304x171_aiadmk_nocreditதடை நியாயம்தான் --ஜெயா







சந்திரலேகா செவ்வி








"கடந்த சில நாட்களாக, விஸ்வரூபம் திரைப்படம்
தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. எதையும்
முறையாக அறிந்து கொள்ளாமல் இது போன்ற செய்திகள் பரப்பப்படுவதையடுத்து,
இதற்கு விளக்கமளிப்பது எனது கடமை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே
எனது முதல் கடமை. இதை சிலர் புரிந்து கொள்ளவில்லை. மக்கள் எவ்வித
பிரச்னையும் இல்லாமல் தங்களது வேலைகளை செய்ய வேண்டும். விஸ்வரூபத்திற்கு
அனுமதி அளித்திருந்தால் வன்முறைகள் ஏற்படும் என உளவுத்துறை அளித்த
அறிக்கையின் காரணமாகவே அப்படம் தடை செய்யப்பட்டது. அதை மீறி, அது
திரையிடப்பட்டிருந்தால், வன்முறை ஏற்பட்டிருக்கும். தமிழகம் முழுவதும்
விஸ்வரூபம் வெளியாகும் 524 தியேட்டர்களுக்கு பாதுகா






விஸ்வரூபம் : 'தமிழக அரசின் தடை தவறு'

சட்டம் ஒழுங்கை காரணம்
காட்டி தமிழக அரசாங்கம் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய எடுத்த முடிவு
தவறானது என்று தமிழக அரசின் முன்னாள் செயலரும், ஜனதா கட்சியின் மாநிலத்
தலைவருமான வி.சந்திரலேகாவின் கூறியுள்ளார்.


கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க








விஸ்வரூபம் தடைக்கு, தனிப்பட்ட காரணம் ஏதும் இல்லை'- ஜெயா 130131161025_chandralekha_ias_304x171_bbc_nocreditசந்திரலேகா



ப்பு அளிக்க 31 ஆயிரத்து 440 போலீசார் தேவை. ஆனால்
தமிழகத்தில் உள்ள மொத்த போலீசாரின் எண்ணிக்கையே 91 ஆயிரத்து 807 தான்.
அசம்பாவிதங்களை தடுப்பது தமிழக அரசின் கடமை. நடைமுறை சிக்கல்களை கருத்தில்
கொண்டே படம் தடை செய்யப்பட்டது. ஜெயா டி.வி., அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது.
அந்த டி.வி.,யில் எனக்கோ, அ.தி.மு.க.,வுக்கு எந்த பங்கும் இல்லை. மேலும்,
கமல் மீது எனக்கு எவ்வித தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. கடந்த 1980ம்
ஆண்டுகளில் நடந்ததாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறும் விஷயங்கள் மிகவும்
கேலியானது. அப்படி ஒரு கடிதத்தையே நான் எம்.ஜி.ஆருக்கு எழுதவில்லை.
எம்.ஜி.ஆரை தினமும் சந்தித்த எனக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லை.
என்னைப் பற்றி தவறான செய்தியை தெரிவித்த கருணாநிதி மீது நடவடிக்கை
எடுப்பேன். வேட்டி கட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவார் என கமல் பேசியதாலேயே
அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து பேசப்பட்டு
வருகிறது. நான் கடந்த 30 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறேன். யார் பிரதமரை
தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். நாட்டிலுள்ள 100 கோடி மக்களே
பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள். கமல் பிரதமரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர்
எனக்கு போட்டியாளரும் இல்லை. எனவே இதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை
எடுக்கப்படுகிறது என்பது உண்மையல்ல. சினிமா ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ்
ஒரு படத்திற்கு மாநில அரசு நேரிடையாக தடை விதிக்க முடியும். இதன்
அடிப்படையிலேயே டேம் 999 படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு முஸ்லிம்
அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், நடிகர் கமல் ஒரு காட்சியைக் கூட நீக்க
தயாராக இல்லை. சமரசத்துக்கும் கமல் முன்வரவில்லை. கமல் பெரிய முதலீட்டில்
படம் எடுத்திருந்தாலும், அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். படத்துக்கு
அனுமதி அளித்து பெரிய கலவரம் ஏற்பட்டிருந்தால் அப்போதும் மீடியாக்கள் என்னை
விமர்சித்திருக்கும். அரசு எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க முடியாது எனவும்
வாதிட்டார் அவர்.

சந்திரலேகா எதிர்ப்பு

அதேவேளை சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழக
அரசாங்கம் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்ய எடுத்த முடிவு தவறானது என்று
தமிழக அரசின் முன்னாள் செயலரும், ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருமான
வி.சந்திரலேகாவின் கூறியுள்ளார்.

வாக்கு வங்கியை மனத்தில் வைத்து நடத்தப்படும் ஒரு
அரசியல் என்று இதனை விபரிக்கும் அவர், இந்த விடயத்தில் தமிழக அரசு மற்றும்
முஸ்லிம் குழுக்களின் செயற்பாடு தவறானது என்றும் கூறியுள்ளார்.

அனைத்து திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்க
முடியாது என்று முடிவு செய்த அரசு, படம் திரையிடப்படாததால் ரசிகர்களால்
அந்த திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருக்கும்
என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

சிறிய குழுக்களின் மிரட்டலுக்காக ஒரு படத்தை தடை செய்ய முற்படுவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum