தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு

Go down

அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு Empty அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு

Post  meenu Sat Mar 02, 2013 12:47 pm

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இந்திய அரசிதழில் இன்று(20.2.13) புதன்கிழமை வெளியானது.

இவ்வாறாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்திருந்த நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அரசிதழில் பதிவாகியிருக்கிறது.

அரசாணையின் நகல் உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீடு, இனி காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலமே மேற்கொள்ளப்படும்.

இறுதித் தீர்ப்பின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அந்த அமைப்பே நீரை பங்கிட்டு வழங்கும்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேலாண்மை வாரியமே எடுக்கும் என்பதால், தமிழகத்தைப் பொறுத்த வரை, காவிரி நதிநீரைப் பெறுவதற்காக இனி நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது என சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜெயலலிதா வரவேற்பு

மேட்டூர் அணை

இந்தத் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியுள்ளது, தனது 30 வருட அரசியல் வாழ்விலேயே மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் நாளென்றும், இதற்காகத்தான் 22 ஆண்டுகளாகத் தாம் போராடிவந்ததாகவும், தனக்கும், டெல்டா பகுதி விவசாயிகளுக்கும் இது மாபெரும் வெற்றியென்றும் இனியும் நடுவர் மன்ற ஆணைப்படி தமிழகத்திற்குக் காவிரி நீர் திறந்துவிட கர்நாடகம் மறுக்கமுடியாதெனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே வேளை கர்நாடகத்தில் இதற்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியாகுமா?
» காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு
» காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயத் தொழிலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில்
» 5 படங்கள் இன்று வெளியானது
» ஸ்ரீசாந்த் தேவையில்லாமல் மீண்டும் பிரச்சினையை கிளப்புகிறார்: போட்டி நடுவர் பரூக் என்ஜினீயர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum