தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மன்னர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு'

Go down

மன்னர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு' Empty மன்னர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு'

Post  meenu Sat Mar 02, 2013 12:09 pm

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டம் ஒன்றில் தீர்வு காணப்பட்டிருப்பதாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மாவட்டத்தின் கடற்படை உயரதிகாரிகள், படையதிகாரிகள், மேலதிக அராசங்க அதிபர் மற்றம் கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

''இந்திய இழுவைப் படகுகளையும், உள்ளுர் இழுவைப் படகுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். மன்னாரில் நடைமுறையில் உள்ள மீனவர்களுக்கான பாஸ் நடைமுறையை நிறுத்த வேண்டும். சிலிண்டர் பயன்படுத்தி தொழில் செய்வது தடை செய்யப்பட வேண்டும்'' என மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மீனவர்கள் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தார்கள்.

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து உரிய அதிகாரிகளுடன் பேசி முடிவு காணப்படும் என அரசாங்க அதிபர் சார்பில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் உறுதியளித்திருந்தார். அதற்கமைய பிரச்சினைககுக்கு முடிவேற்பட்டிருப்பதாக மன்னார் மாவட்ட மீனவர் சங்கங்களின் சமாசத் தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்திருக்கின்றார்.

இந்திய இழுவைப் படகுகள் தொடர்பில் அரச மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தி படிப்படியாகத் தீர்வு காணப்படும் என கடற்படை உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் உறுதியளித்திருக்கின்றனர். அதேவேளை, இழுவைப்படகுகள் தொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

மீனவர்களுக்கான பாஸ் வழங்குவதில் ஏற்படுகின்ற தாமதத்தை நீக்கி, கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரின் கையெழுத்துக்களுடன் உடனடியாக ஒரு பாஸ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது என்று மீனவர் சங்க சமாசத் தலைவர் ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் வடகடலில் சிலிண்டர்கள் பாவித்து தொழில் செய்வதை உடனடியாகத் தடை செய்து, மாவட்டத்தின் தென்பகுதி கடலில் கரையிலிருந்து 20 கடல் மைல்களுக்கு அப்பால் இதனைச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் மீனவர் சங்கப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்திருக்கின்றார்கள்.

மன்னார் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இவ்வாறு தீர்வு காணப்பட்டிருப்பதை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் அவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum