தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலேசியாவில் நாடற்ற நிலையில் மூன்று லட்சம் பேர்"

Go down

மலேசியாவில் நாடற்ற நிலையில் மூன்று லட்சம் பேர்" Empty மலேசியாவில் நாடற்ற நிலையில் மூன்று லட்சம் பேர்"

Post  meenu Fri Mar 01, 2013 5:17 pm

மலேசியாவில் இந்த ஆண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் இவ்வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் சுமார் 50,000 இந்திய வம்சாவளியினர் பள்ளிகளில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது.

அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தாலேயே அவர்களால் பாடசாலைகளில் அனுமதி பெற முடியவில்லை என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.

பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கோரி போராடுபவர்கள்
தொடர்புடைய விடயங்கள்

மனித உரிமை,
மலேசியா

மலேசியாவில் சுமார் மூன்று லட்சம் இந்திய வம்சாவளியினர் நாடற்ற நிலையில் வசிப்பதாகவும், அவர்களை அரசு திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கிறது எனவும் தேசிய மக்கள் நீதிக்கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என் சுரேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார்.

"மலேசிய அரசு திட்டமிட்ட வகையில் மதரீதியான புறக்கணிப்பை செய்கிறது"

தேசிய மக்கள் நீதிக்கட்சியின் துணைத் தலைவர் சுரேந்திரன்

இம்மக்கள் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து பிறப்புச் சான்றிதழும் அடையாள அட்டையும் மறுக்கப்படுகிறது என்றும், இது சட்டத்துக்கு விரோதமானது எனவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக, இந்திய வம்சாவளி மக்களில் நாடற்ற நிலையில் இருக்கும் பெருபான்மையானவர்கள் இந்துக்கள் என்று கூறும் சுரேந்திரன் அதன் காரணமாகவே அரசு திட்டமிட்ட வகையில் மதரீதியான புறக்கணிப்பை செய்கிறது எனவும் சுரேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார்.
சுரேந்திரன் பேட்டி

"மலேசிய அரசு மதரீதியான புறக்கணிப்பை செய்கிறது"

மலேசிய அரசு இந்திய வம்சாவளியினரை மதரீதியாக புறக்கணிக்கிறது என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்

மாற்று மீடியா வடிவில் இயக்க

எனினும் இந்தோனீசியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு உடனடியாக தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் அரச சலுகைகளை பெறுகிறார்கள் எனவும், அவர்களின் வாக்குகளை குறி வைத்தே அரசு இப்படி செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சிகளால் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியும், வீதிகளில் இறங்கியும் போராட முடியுமே தவிர வேறு ஏதும் செய்ய முடியாத நிலைமையே மலேசியாவில் நிலவுகிறது எனவும் அவர் கூறுகிறார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!
» பாடல் காட்சிக்கு தயாராகும் மூன்று பேர் மூன்று காதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum