தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனோரீதியான பாலியல் குறைபாடுகள்

Go down

மனோரீதியான பாலியல் குறைபாடுகள் Empty மனோரீதியான பாலியல் குறைபாடுகள்

Post  meenu Thu Feb 28, 2013 6:48 pm

பாலியல் குறைபாடுகள் உடல் கோளாறுகளால் மட்டுமல்ல, உள்ளக் கோளாறுகளாலும் உருவாகும் என்பது தற்போது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை.

உடல் உறவின் அவசியம்
இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும்.
உடல் உறவு என்பது அற்ப நேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீப கால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுப்படுத்தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும். பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. உடலுறவு கொள்வதால் மனஇறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.

பாலியல் குறைபாடுகள் – ஆண்கள் (முன்பே சொன்னபடி)
1. உடலுறவின் ஆசையின்மை
2. குறைந்த வீரியம்
3. விறைப்பின்மை
4. விந்து விரைவாக வெளியேறுதல்
5. பின்னோக்கி விந்து வெளியேறுதல்
ஆண்கள் பெண்களின் பாலியல் குறைபாடுகளுக்கு உடல்ரீதியாக
பலகாரணங்கள் உள்ளன. ஆனால் நாம் இங்கு பார்க்கப் போவது மனோரீதியான காரணங்களே.
குழந்தைப்பருவம், யௌவன பருவம்
ஒரு குழந்தை தனது செயல்களுக்கு, தந்தை – தாயையே ஆதாரமாக கொள்கிறது. அவர்கள் சொல்வதையும், செய்வதையும் தான் குழந்தை திருப்பி செய்கிறது. ஆண்குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அதற்கு விறைப்புத்தன்மை உண்டாகிறது – அதுவும் தொப்பூழ் கொடியை அறுக்கும் முன்பே, பிறந்தவுடன் பெண்குழந்தைகளுக்கு ஒரு வித ஈரம் பிறப்பிறுப்பில் ஏற்படுகிறது.
இதனால் பிறக்கும் போதே பாலியல் உணர்வுடன் குழந்தைகள் பிறக்கின்றன என்பது தெரிகிறது. இரண்டிலிருந்து ஐந்து வயதுக்குள் தங்கள் பிறப்புறுப்புகளை தொடுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குழந்தைகள் புரிந்து கொள்கின்றன. அதே சமயம் குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் தான் பிறப்புறுப்புகளை தொடுவதை விரும்பவில்லை என்றும் தெரிந்து கொள்கின்றனர். இந்த கட்டுபாடு தீவிரமாக பெற்றோர்களால் கடைபிடிக்கப்பட்டால், பிற்காலத்தில் பாலியல் ஒரு அருவருப்பான செயல் என்ற மனப்பான்மை ஏற்பட்டு விடும்.
ஆறு, ஏழு வயது குழந்தைகள் ஆண், பெண் பேதங்களை நன்றாக புரிந்து கொண்டு விடும். பாலியல் பற்றியும் ‘இலை மறைவு – காய் மறைவாக’ புரிந்து கொள்ளும். இந்த குழந்தை பருவங்களில், பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில், பெற்றோர்களின் கண்டிப்பே பிற்காலத்தில் அந்த குழந்தையின் பாலியல் கோளாறுகளை மனோரீதியாக உருவாக்கலாம். பருவமடைந்த காலத்தில் (12 லிருந்து 17 வயது வரை) சிறுவர்கள், சிறுமிகளும் ‘பெரிய’ மனிதர்களாகின்றனர்! இந்த காலத்தில் இவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது பெற்றோர்களுக்கு ஒரு நீங்காத தலைவலி!
சுய இன்பம் அதுவும் யௌவன பருவ வாலிப பருவ ஆண்களுக்கு அறிமுகமாகிறது. பாலியல் கற்பனைகள், கனவுகள் ஏற்படுகின்றன. இந்த பருவகாலத்தின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் (வாலிப குழந்தைகள்) கவனமாக கண்காணித்து ஆக்க பூர்வமான சிந்தனைகளால் பாலுணர்வுகளிலிருந்து திசை திருப்ப முயன்றால் நல்லது. அனுபவங்கள் தான், பிற்கால மண வாழ்க்கையை நிர்ணயிக்கும். பெண்களிலும் சுய இன்பம் காண்பவர்கள் இருக்கிறார்கள். மேலை நாடுகளில் தாய்மார்கள் தங்களின் யௌவன மங்கையர்களுக்கு தினசரி கொடுக்கும் விட்டமின் மாத்திரையுடன் கருத்தடை மாத்திரையும் சேர்த்து கொடுப்பது வழக்கமாம். நமது தேசத்தில் அந்த நிலைமை இன்னும் வரவில்லை. ஏனென்றால் இந்தியாவில் பெற்றோர்கள் செக்ஸ் விஷயங்களை குழந்தைகளுடன் பேசுவதில்லை. ஏன், கணவனும், மனைவியுமே பாலுணர்வை பற்றி பேசுவதே அபூர்வம்!
சுய இன்பம் (Masturbation)
பருவ காலத்தில் செய்யும் இந்த செய்கையில் தவறில்லை. ஆனால் இதனால் ஏற்படும் பின் விளைவுகள், மனோ ரீதியாக பாதிக்கும். நமது பெரியோர்களும், மருத்துவர்களும், இலக்கியங்களும் இது ஒரு கெட்ட பழக்கம், “விந்து விட்டவன் நொந்து கெடுவான்” என்று பயமுறுத்தி வந்திருப்பதால், இதை செய்து விட்டு வருந்துவது பாதிப்பை உண்டாக்கும்.
ஆண் குறைபாடுகளுக்கு மனோ ரீதியான காரணங்கள்
1. படபடப்பான பேராவல், மன விசாரம், ஆபத்து வருமோ, முடியாமல் போய்விடுமோ என்ற பயம் (Anxiety), மனச்சோர்வு (Depression).
2. அறியாமை பாலியல் பற்றிய தவறான கருத்துக்கள்
3. பிடிக்காத மனைவி, ஒத்துழைக்க மறுக்கும் மனைவி
4. முன்பே சொன்னபடி வளரும் பருவத்தில் மன பாதிப்புகள், பயம், தன்னம்பிக்கை இல்லாதது.
சிகிச்சை முறைகள்
அலோபதி மருத்துவத்தில் மருத்துவம், மனோதத்துவ சிகிச்சைகளும் சேர்ந்து உபயோகிக்கப்படுகின்றன. ஸில்டெனாபில் (வயாகரா) போன்ற மருந்துகள் நல்ல பலனை அளிக்கின்றன. ஆனால் இவைகளை டாக்டரின் கண்காணிப்பில் உபயோகிக்க வேண்டும். மனோதத்துவ முறையில் Sensate Focussing எனப்படும் சிகிச்சை தரப்படும்.
ஆயுர்வேத மருந்துகள்
ஆயுர்வேத சிகிச்சைகள், பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கும், குறிப்பாக மனக்கோளாறுகளுக்கும் முழுமையான பயனை அளிக்கும். பஞ்சகர்மா, ரசாயனம், வாஜீகர்ணம் முதலிய சிகிச்சைகள் அளிக்கப்படும். பிறகு திரிதோஷக் கோளாறுகள் சீராக்கப்படும். இதில் சத்துணவு, யோகா, மூலிகைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் அடங்கும். இவ்வாறு வியாதியின் அடிப்படை காரணம் களையப்படும். சதவாரி, சங்கு புஷ்பம், அஸ்வகந்தா, குடூச்சி, ஜடமான்சி போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத வைத்தியரை அணுகி, பயனடையவும்.

செக்ஸ் சிகிச்சை
உணர்வுகளை ஒருமயப்படுத்துதல் (Sensate Focus Technique)
தாம்பத்திய உறவு குறைபாடுகள் மனோரீதியாக ஏற்பட்டிருந்தால் இந்த முறை பயனளிக்கும். இந்த சிகிச்சையின் நோக்கம் – உடலுறவு செயல்பாட்டை பற்றிய டென்ஷனை, பதட்டத்தை தவிர்ப்பது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் எந்த செயல்பாடுகள் தங்களுக்கு கிளர்ச்சியூட்டும் என்பதை கண்டறிவது. குறைந்த இச்சை, உடலுறவில் நாட்டமின்மை, உச்சக்கட்டத்தை அடைய முடியாமை மற்றும் ஆணுறுப்பின் விறைப்பின்மை, இவற்றுக்கு (மனோ ரீதியாக) இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சிகிச்சை மூன்று நிலைகளில் செய்யப்படும். தம்பதிகள் ஒரு நிலையில் திருப்தி அடைந்த பின் அடுத்த நிலைக்கு செல்லலாம்.
முதல் நிலையில் தொடுதல் மூலமாக ஒருவருக்கொருவர் பரிச்சயமாதல். செக்ஸ் உணர்வு மற்றும் உடலுறவு நோக்கங்களை தவிர்த்து விட்டு, பிறப்புறுப்புகள், மார்பகம் தவிர, வேறு இடங்களில் மனைவி மாற்றி கணவன் என்று மாறி மாறி தொட்டுக் கொள்ள வேண்டும். இந்த தொடுதலால் ஏற்படும் சுகத்தை, எங்கு எப்படி தொடுவது என்பதையும் அறிய வேண்டும்.
இரண்டாம் நிலையில் தம்பதிகள், ஒருவர் மற்றவரின் உடலில் எல்லா பாகங்களையும் தொடுவது. (மார்பக, பிறப்புறுப்பு உட்பட). மாற்றி மாற்றி செய்ய வேண்டும். இந்த நிலையிலும் நோக்கம் தொடுதல் உணர்வை குவியச் செய்வது தான். உடலுறவுக்கு அனுமதியில்லை. மூன்றாம் கட்டத்தில் தொடுதலை அதிகரித்து உடலுறவு கொள்வது. உச்சக்கட்டம் அடைவது முக்கியமல்ல. தொடுதலால் ஏற்படும் சுகம் உணரப்படுதல் முக்கியம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum