தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆணின் பிரச்சனைகள்

Go down

ஆணின் பிரச்சனைகள் Empty ஆணின் பிரச்சனைகள்

Post  meenu Thu Feb 28, 2013 6:42 pm

ஆண்களில் பாலுறவு பிரச்சனைகள் என்பன உறவு கொள்வதில் ஏற்படும் சிக்கல்களையும், இயலாமையையும் குறிக்கும். ஆண்மைக் குறைவு என அழைக்கப்படும் ஆண்களின் பாலுறவும் பிரச்சனைகள் பலவகைப்படும். இவை உடல் ரீதியானவையும் மனரீதியானவையுமாகும்.

இது உறவு கொள்வதில் விருப்பமின்மை, விறைப்புத்தன்மை அடைவதில் சிக்கல் அல்லது குறைபாடு, விந்தணுக்கள் வெளிப்படுவதில் கோளாறு, விந்தணுக்களின் தரம் மற்றும் அளவு குறைவு, உச்சக்கட்டத்தை அடைவதில் சிக்கல் அல்லது உச்சநிலை அடையாமை ஆகிய அனைத்தையும் குறிக்கும்.
அனைத்து ஆண்மைக்குறைவும் உடல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியானதும் கூட. பெரும்பாலானவை இரண்டின் கலவையே ஆகும். உடல்ரீதியாகக் தோன்றக் கூடியவை மனரீதியானவையாகவும் மாறலாம். இவை பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் குறிக்கும். இவை சிறிய பிரச்சனையைக் கூட பூதாகரமாக மாற்றிடக்கூடும்.
பல சமயங்களில் ஆண்களைப் பெண்கள் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள அழைப்பதால் ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இந்த கட்டாயப்படுத்தப்பட்டு உறவு கொள்ளச் செய்யும் நிலையால் மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் ஆணின் ஒரு சிறிய பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. ஆண்களின் இயல்பான பாலுறவு நிலையில் சம அளவு பங்கு மனதிற்கும் உடலுக்கும் உள்ளது. மனத்தளவில் ஆரம்பமாகும் ஆசை, உடலில் பரவி நரம்புகள் வலுப்பெற்று இரத்த ஓட்டம் அதிகமாகி முடிவாக சில சுரப்புகளை சுரக்கின்றது. எனவே தான், மனமும் உடலும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. பல தருணங்களில் மனமும், உடலும் சேர்ந்தே உறவைக் கட்டுக்குள் வைத்து தேவையான தருணத்தில் ஆரம்பமாகி தேவையான சமயத்தில் உச்ச நிலையை அடைய வைக்கின்றது. பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு என்பது கீழ்க்கண்ட ஐந்து வகைகளிலேயே ஏற்படுகின்றது.
1. விருப்பமின்மை
உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதையே இது
குறிக்கும். பொதுவாக எண்ணங்கள், தொடு உணர்வு, நறுமணம், வார்த்தைகள், ஆசை வார்த்தைகள் போன்றவையால் இந்த விருப்பம் தூண்டப்பட வேண்டும். இது இயல்பாக நடைபெறவில்லையெனில் அது ஆண்மைக்குறைவை குறிக்கும். இத்தகைய உணர்வு ஒரு வித உணர்ச்சியை ஏற்படுத்தி உறுப்புகளுக்கு அதிக இரத்தத்தைச் செலுத்தி உறுப்பை விறைப்படையச் செய்திடும். அப்பொழுது நரம்புகள் முறுக்கேறும், தசைகள் வலுப்பெறும். உடலின் அனைத்து தசைகளும் ஒரு வித உணர்ச்சியை உணர்கின்றன.
இதனையே PLATEAU STAGE என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இவ்வாறு ஆரம்பமாவதற்கு எண்ணங்களே ஆரம்பகட்டமாகத் திகழ்கின்றன. அத்தகைய எண்ணங்கள் அனைத்து நரம்புகளையும் முறுக்கேற்றி முடிவில் உச்சநிலையை அடைந்து விந்தணுக்களை வெளிப்படச் செய்த பின்னர் நரம்புகள் முறுக்கு குறைந்து பின்னர் இயல்பு நிலையை அடைகின்றன.
உச்சக்கட்டத்திற்கும் விந்தணுக்கள் வெளிப்படுவதற்கும் எந்த வித சம்பந்தமில்லை. விந்தணுக்கள் வெளிப்படாமல் உச்சநிலையை அடையலாம். உச்சநிலையை அடைந்த பின்னரும் விந்தணுக்கள் வெளிப்படாமல் இருக்கலாம். பொதுவாக ஆண்களுக்கு விந்தணுக்கள் உச்சநிலைகள் அடையும் பொழுது வெளிப்படும். ஒரு முறை விந்தணுக்கள் வெளிப்பட்டால் ஆணுக்கு உடனடியாக விரைப்புத்தன்மை குறைந்திடும். குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் கழித்துத்தான் அடுத்து விரைப்புத்தன்மை அடைய முடியும். இதில் சில விதி விலக்குகளும் உண்டு. பொதுவாக வயதிற்கு ஏற்ப 20 நிமிடங்களிலிருந்து 30 நாட்கள் வரை அடுத்து விரைப்புத் தன்மை அடைய தேவைப்படலாம்.
2. செயல் திறன் குறைபாடு
ஆண்களிடையே செயல் திறன் அளவு பெரிதும் வேறுபடுகின்றது.
சிலருக்கு மிகவும் குறைந்த வேகமும் செயல் திறனும் போதுமானதாகும். வேறு சிலருக்கு அதிக வேகமும் செயல்திறனும் தேவைப்படுகின்றது. செயல்திறனில் குறைபாடு மன அழுத்தத்தாலும் உடல் அசதியானலும் வேறுபட வாய்ப்புள்ளது. வயது அதிகரிக்க அதிகரிக்க வேகமும் செயல்பாடு குறைந்து கொண்டே செல்வது இயற்கையானதே. மாறாக சிலருக்கு எப்பொழுதுமே வேகமும் செயல்பாடும் குறைந்தே காணப்படுவது தம்பதியினரிடையே பல குழப்பங்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
சிலருக்கு எப்பொழுதுமே குறைவான வேகமும் செயல்திறனும் இருக்கலாம். சிலருக்கு மன அழுத்தம், வெறுமை, சோர்வு, தளர்ச்சி, அசதி போன்றவற்றாலும் இது நிரந்தரமாக ஏற்படலாம். சிலருக்கு பிற மருந்துகளால் கூட இவ்வாறு ஏற்படலாம். (உயர் இரத்த அழுத்தம், மனஅழுத்தம், சோர்வு) சிலருக்கு தம்பதியினரிடையே ஏற்படும் மனவேற்றுமை காரணமாகக் கூட இவ்வாறு குறைந்த வேகமும், செயல் திறனும் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறைவான வேகமும், செயல்திறனும் கொண்டவர்களை உறவைப் பற்றி சிந்திப்பதையே குறைத்துக் கொள்கின்றனர். அவர்கள் உறவு கொள்வதையே விரும்புவதில்லை. அவர்களுக்கு தொடுவது, ஆசைவார்த்தைகள், காட்சிகள் கூட செயல் திறனை தோற்றுவிப்பதில்லை. அவர்களால் விறைப்புத்தன்மை அடைய முடிவதில்லை. இவ்வாறு பல சிக்கல்கள் ஏற்படுவதால் அத்தகைய ஆண்கள் தன் துணையை விட்டு விலகி இருப்பதையே விரும்புகின்றனர். வேறு சிலர் தன் மனைவியின் தேவைக்கேற்ப மட்டும் நடந்துக் கொண்டு அவளின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கின்றனர்.
இப்பிரச்சனை உடையவர்கள் மருத்துவரை அணுகி கலந்தாலோசித்து தங்கள் பிரச்சனையை எடுத்துக் கூறினால் நிச்சயமாக நல்ல தீர்வு காண முடியும். ஒரு இரத்தப் பரிசோதனை செய்து ஆண் ஹார்மோன் (டெஸ்டோஸ்டீரோன்) அளவை பரிசோதித்து தேவை ஏற்பட்டால் வெளியிலிருந்து உட்செலுத்தி சீரமைக்கலாம். அல்லது மனரீதியான பிரச்சனையாக இருந்தால் அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி தேவையான மருந்துகளைக் கொடுத்து அவர்களின் பிரச்சனைகளை விட்டு வெளிவர வழி வகுத்திடலாம்.
3. விரைப்பின்மை
விரைப்பின்மை என்பது ஆண்களின இனப்பெருக்க உறுப்பு உறவு
கொள்ள ஏதுவாக பெரிதாக ஆக முடியாமல் விரைப்பில்லாமல் இருப்பதையே குறிக்கும். எல்லா ஆணும் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் இத்தகைய பிரச்சனையை அனுபவிக்க நேரிடுகின்றது. ஆனால் அந்த விரைப்பின்மையே தொடர்ச்சியாக அடிக்கடி ஏற்படும் பொழுது தான் இத்தகைய பிரச்சனை பற்றி கவலைப்பட வைக்கின்றது. எப்பொழுதோ ஏற்பட்டு மறைந்தால் அது ஒரு பிரச்சனை அல்ல. தொடர்ச்சியாக ஏற்பட்டால் தான் பிரச்சனை.
விரைப்பின்மை பல விதமாக அமைகின்றது. விரைப்புத் தன்மை முற்றிலுமாக ஏற்படாதது முதல் போதுமான அளவு விறைப்புத்தன்மை அடைய முடியாமை வரை உள்ளது.
விரைப்புத்தன்மை ஏற்பட ஆண் உறுப்பு பெரிதாக ஆக வேண்டும். அதிக இரத்தம் உள்ளே செல்ல வேண்டும். குறைவான இரத்தமே வெளியே செல்ல வேண்டும். அப்பொழுது தான் விரைப்புத் தன்மை கிடைக்கும். ஒரு பெண்ணின் உறுப்பினுள் நுழைவதற்கு ஆணின் உறுப்பு இவற்றினாலேயே அதிக நீண்ட நேரம் இருக்க வேண்டியுள்ளது. இது முடியாமல் போகும் பொழுது விரைப்பான தன்மை ஏற்பட்டாலும் அது தேவையான போதுமான அளவாக அமைவதில்லை.
இதற்குக் காரணங்கள்
இரத்த நாளங்களில் குறைபாடு, நரம்புகளில் குறைபாடு, ஆண் சுரப்பியின் பற்றாக்குறை, அறுவை சிகிச்சை ஏற்படுத்திய குறைபாடு, சத்தும் குறைபாடு என பல ஆகும். இவை அனைத்திற்கும் தகுந்த மருந்துகள் உள்ளன. தகுந்த மருத்துவரை அணுகி இருக்கும் பிரச்சனையை ஒளிவு மறைவில்லாமல் எடுத்துக் கூறி மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று வாழ்க்கையை சந்தோஷமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிக் கொள்ளலாம்.
4. விந்து முந்துதல்
விந்து முந்துதல் என்பது ஒரு ஆணின் உறுப்பு பெண்ணின் உறுப்பினுள்
நுழைந்தவுடன் ஏற்படுவது, உச்சநிலையை அடையாமல், விந்து வெளிப்படுவது, போதுமான நேரம் உறவு கொண்டு பின்பு விந்து வராமல் முன்பே வருவது. பெண்ணின் தேவைக்கேற்ப செயல்பட முடியாமல் விந்து வெளிப்பட்டு விரைப்புத் தன்மையை இழப்பது போன்ற பல தரப்பட்ட பிரச்சனைகளையும் குறிக்கும்.
அனேக இளவயது ஆண்கள் இத்தகைய பிரச்சனையே அனுபவிக்கின்றனர். தாங்கள் விரும்புவதை விட தங்கள் துணைவியர் விரும்புவதை விட வெகு விரைவாகவே விந்து வெளிப்பட்டு விரைப்பு குறைந்து விடும். இது பெண் உறுப்பினுள் சென்ற ஒரிரு நிமிடங்களில் ஏற்பட்டு விடுகின்றது.
விந்து முந்துதல் ஒரு நோய் அல்ல. சில ஆங்கில மருத்துவர்கள் இதனை மனரீதியானது எனவும், வேறு சில ஆங்கில மருத்துவர்கள் இது ஆண் உறுப்பு மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியதாக மென்மையாக இருப்பதனால் ஏற்படுகின்றது. என கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆயுர்வேத மருத்துவம் இதனை உடலின் உஷ்ணநிலை அதிகரிப்பதால் ஏற்படுகின்றது எனவும், இதற்கு உடலின் ஜீரண சக்தி இரத்த ஒட்டம் உஷ்ண நிலையில் உயர்வு போன்ற பல காரணமாகின்றன எனவும், இவை அனைத்தையும் சீரமைத்தால் சரியாகி விடும் என நம்பிக்கை அளிக்கின்றது. இதற்கு உயர்வான அதி உன்னத மூலிகை கலவைகள் அடங்கிய மூலிகை மருந்துகள் நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை முற்றிலும் மூலிகைகளால் ஆனவை. பக்க விளைவுகளற்றவை, பாதுகாப்பானவை, நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக உபயோகப்படுத்தக் கூடியவை. உடல் உஷ்ணத்தைப் பற்றி தனியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
5. விந்து வெளிப்படாமை
இயல்பான நிலையில் ஆண் உச்சநிலையை அடையும் பொழுது
சிறுநீர்ப்பை மூடிக்கொள்ளும். விந்தணு மட்டும் விந்தணுப்பையிலிருந்து ஆணுறுப்பு வழியாக வெளியேறும். ஆனால் சில சமயங்களில் இது நடைபெறும் பொழுது சிறுநீர்ப்பை மூடாமல் திறந்த படியே இருக்கும். இதனால் உறவு இயல்பாக நடைபெறும். உச்ச நிலை ஏற்படும். விந்தணு வெளியேறும். ஆனால் அது ஆண் உறுப்பு வழியாக வெளியேறாமல் அது சிறுநீர்ப்பையினுள் விழுந்து விடும். இது பல ஆண்களுக்கு சர்க்கரை வியாதியால் ஏற்படலாம். சில சமயங்களில் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் அடியால் ஏற்படலாம் அல்லது தவறான அறுவை சிகிச்சையால் கூட ஏற்படலாம். இதனால் எந்த ஒரு பாதிப்போ பிரச்சனையோ ஏற்படாது. ஆனால் கர்ப்பம் உண்டாக்க மட்டும் வாய்ப்பில்லாமல் போய்விடுகின்றது. குழந்தை வேண்டுபவர்கள் இப்பிரச்சனையை சரி செய்துக் கொள்ளலாம்.
ஆயுர்வேத மருத்துவம்
பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதனை முதலில் முழுவதுமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். அதனை மருத்துவரிடம் (தகுந்த மருத்துவரிடம்) எடுத்துக் சொல்லி, அவரது அறிவுரையையும் மருத்துவத்தையும் பெற வேண்டும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடிய மருந்துகள் உள்ளன. அவற்றை தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படி சரியாக உபயோகித்து வந்தால் வாழ்நாள் முழுவதும் இப்பிரச்சனைகள் ஏழாது. அதி உன்னத மூலிகைக் கலவை மருந்துகள் உள்ளன.
அவற்றை சரியான அளவுகளில் சரியான ஆலோசனையின் பெயரில் தொடர்ச்சியாக உபயோகித்து வர எத்தகைய ஆண்மைக்குறைவாக இருந்தால் சரி செய்திடலாம்.
எல்லா மருத்துவ முறைகளிலும் இப்பிரச்சனைகளுக்கு மருந்துகள் இருக்கின்றன.
ஆனால் ஆயுர்வேத மருத்துவ முறையில் தான் பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை உள்ளது. ஏனெனில் ஆயுர்வேத மருந்துகள் மூலிகைகள் மட்டுமே அடங்கியவை. இன்னும் என்ன யோசனை?
தகுந்த மருத்துவரை நாடுங்கள். வாழ்வை வளமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum