தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆம வாதம் – வீட்டு வைத்தியம்

Go down

ஆம வாதம் – வீட்டு வைத்தியம் Empty ஆம வாதம் – வீட்டு வைத்தியம்

Post  meenu Thu Feb 28, 2013 2:34 pm

1. புங்க இலைகளால் தயாரிக்கப்பட்ட சூடான கஷாயத்தால் ஒத்தடம் தருவது.
2. கோதுமை தவிட்டை ஒரு துணியில் “கிழி” யாக கட்டிக் கொள்ள வேண்டும். கற்பூராதி தைலம் அல்லது தந்தூராதி தைலம் இவற்றில் ஒன்றை, இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி, தவிட்டு கிழியை அதில் தேய்த்து, சூடு பொறுக்கும் அளவில் இருக்கும் போது, வலியுள்ள பாகங்களில் ஒத்தடம் கொடுக்கவும். 15 நிமிடம் இந்த ஒத்தடம் கொடுக்கவும்.
3. முருங்கைக் கீரை, எருக்கினிலை, புளியிலை, நொச்சியிலை இவற்றை சமபாகம் எடுத்து, துருவிய தேங்காயும் (சமபாகம்) சேர்த்து இரும்புச் சட்டியில் வாட்டி, தவிட்டுக்கு பதிலாக, இவ்விலைகளை துணிக்கிழியில் கட்டி, மேற்சொன்ன விதத்தில் உபயோகிக்கலாம்.
4. இடித்த புளியிலை அல்லது வெறும் வெந்நீரையோ, பொறுக்கும் சூட்டில் வீக்கமுள்ள இடத்தில் ஊற்றவும். இவ்வாறு தினம் 2 – 3 – 4 தடவைகள் செய்யலாம்.
5. புளி இலைகளை வெந்நீரில் ஊறவைத்து, மாவு போல் மசித்து, இந்துப்பு சேர்த்து, வீக்கமுள்ள இடங்களில் பற்று போடலாம்.
6. ஆடாதோடை இலைகளை வெந்நீரில் வேகவைத்து, ஒத்தடம் கொடுக்கலாம்.
7. ஆமணக்கு கஷாயத்தை வீக்கமுள்ள இடங்களில் தெளிக்கவும். அல்லது ஆமணக்கு எண்ணையை வலியுள்ள இடத்தில் பூசி, நன்றாக தடவவும். இதன் மேல் சூடாக ஒத்தடம் கொடுக்கவும். ‘ஆமா’ என்கிற மூட்டினில் தங்கியிருக்கும் கழிவு / நச்சுபொருளை நீக்க ஆமணக்கு எண்ணை சால சிறந்தது.
8. பொடி செய்த பாறை உப்பு, மணல் இவற்றை சமபாகம் எடுத்து, வாணலியில் சூடாக்கி, துணிப்பை அல்லது துணிக்கிழியில் போட்டு கட்டி, ஒத்தடம் கொடுக்கவும்.
9. பாகல் ஜுஸை மூட்டுக்களில் தடவலாம்.
10. கடுகை களிம்பாக அரைத்து மூட்டுக்களில் தடவலாம்.
(ஆ) உள்மருந்துகள்
1. பாகல் பழங்களை உப்பு, இஞ்சியுடன் வேகவைத்து, உணவுடன் உண்ணலாம்
2. கொள்ளு சூப் வாதத்தை கண்டிக்கும். உடல் எடை குறைய உதவும்.
3. உலர்ந்த இஞ்சி (சுக்கு), தனியா (கொத்தமல்லி விதை) இவற்றின் கஷாயம் வாதத்தை உண்டாக்கும் அஜீரணத்தை போக்கும். கூட ஆமணக்கு எண்ணை சேர்த்துக் கொண்டால் ரூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸீன் வலியை போக்கும்.
4. உலர்ந்த இஞ்சி (சுக்கு), நெரிஞ்சி (கோக்ஸ§ர்) இவற்றினால் தயாரிக்கப்பட்ட கஷாயம், அஜீரணத்தை போக்கும். இதை காலையில் குடிக்க வேண்டும். அஜீரணம் குணமானால் ஆமவாத பாதிப்புகள் குறையும்.
5. வேப்பிலை சாறு, பால் சேர்த்து பருகினால் ஆமவாத வலி குறையும்.
ஆயுர்வேத மருந்துகள்
ஆயுர்வேதத்தில் பல நல்ல மருந்துகள் ஆர்த்தரைடீஸ் வியாதிகள் பலவற்றை போக்க, பயன்படுகின்றன. கீழே சில மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. நீங்களாகவே இந்த மருந்துகளை வாங்கி உபயோகித்தால் தலைவலி போய், திருகு வலி வந்தால் போல் ஆகும். ஆயுர்வேத மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உபயோகிக்கவும்.
வெளிப்பூச்சுக்கான தைலங்கள்
மஹாநாராயண தைலம், சைந்தாதி தைலம், பிண்ட தைலம், ஆமவாத தைலம், பலாகுடிச்யாதி தைலம், பலாக்வகந்தாதி தைலம், பிரபஞ்ஜன விமர்தன தைலம், பூனாக தைலம், தன்வந்த்ர தைலம், ஷீராபாலா தைலம், விஷமுஷ்டி தைலம்.
மருந்துகள்
மஹாயோக ராஜ குக்குலு ஒரு சிறந்த மருந்து. தவிர ப்ருஹத் வட்சிந்தாமணி ரஸ, த்ரிபால சூரணம், பலாரிஷ்டம், வாதவித்வம்ஸினீ ரஸ, வாத கஜாங்குஸ ரஸ, வாத ராஷஸ, ஸ்வர்ணவாத ராக்ஷஸ.
ப்ருஹத் வட்சிந்தாமணி ரஸ மருந்துடன் மஹா ரஸ்னாதி க்வாத் என்ற மருந்தும் சேர்த்து கொடுக்கப்படுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum