தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் வலியா?

Go down

கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் வலியா? Empty கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் வலியா?

Post  ishwarya Thu Feb 28, 2013 1:40 pm

வயதாக ஆக அறிவும், அனுபவமும்அதிகமாகிறதோ இல்லையோ முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை கடினமடைகின்றது. மேலும் எலும்புகளின் அடர்த்தி குறைந்து அதிர்வுகளைத் தாங்கும் சக்தி குறைகிறது என்பதும்உண்மை.

* இதன் காரணமாக முதுகெலும்பின் நடுவில் உள்ள தண்டுவடத்திலிருந்து நரம்பு வெளியேறும் துவாரங்கள் தடைப்படுகின்றன. இதைத் தொடர்ந்து அந்த நரம்புக்கு வந்துசெல்லும் ரத்தத்தின் அளவும் குறைகிறது. எனவே தொடை, கால்மூட்டின் பின்புறம் ஆகியவை இழுத்தது போல் வலியுடன் கொஞ்சம்மரத்தும் போகிறது.

* இந்த வலிக்குப் பலரும் காலில் கட்டுப் போட்டுக் கொண்டு தன்னையேஏமாற்றிக் கொள்கிறார்கள்.

* சில சமயம் கால் மரத்துப் போவது போல் இருக்கும் போது தாங்களாகவே நியூரோபியான் போன்ற மாத்திரைகளை விழுங்கி ஏமாந்தவர்களும் உண்டு. இது தங்களது சர்க்கரைநோயினால் ஏற்பட்ட நிலை என்று தவறாக எண்ணும் மக்களும் உண்டு.

* காலிலோ தொடையிலோ வலியுடன் மரத்துப் போனால் காலில் கட்டுப் போடுவதுஅபத்தம். இதனால் அவஸ்தைகள் அதிகரிக்கும். உங்கள் காலுக்கு வந்து செல்ல வேண்டிய ரத்தஓட்டம் தடைப்படுகிறது.

* தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி என்றால் அங்குஉணர்ச்சிகளை எடுத்துச் செல்லும் குறிப்பிட்ட நரம்பு ஏதோ ஒருவித அழுத்தத்தைச் சந்திக்கிறதுஎன்று அர்த்தம்.

* இந்த அழுத்தம் ஓரளவுக்கு மேல் அதிகமானால் அதைக் காலில் வலியாக உணர்கிறீர்கள். இந்த நிலையில் வலி ஏற்படும் பகுதியை அழுத்தமாகக் கட்டுப் போட்டுக் கொண்டால்அங்கு வரும் ரத்த சப்ளை குறைந்தோ ஏன் நின்றோ கூட போய்விடலாம்.

* காலில் பச்சிலைக் கட்டிக்கொண்டாலோ ஏதாவது ஆயின் மெண்ட் தேய்த்துக் கொண்டாலோ இந்த வலி மறைவதில்லை. குறைவதுமில்லை. களிம்பு தயாரிக்கும் நிறுவனத்தைத் தவிர வேறு யாருக்கும் லாபம் இல்லை. பின் என்னதான்செய்வது?

* பரிசோதனைக்குப் பிறகு எக்ஸ்ரேயில் முதுகு, இடுப்புக்கட்டு ஆகியவற்றைப் பார்க்கும்போது மூட்டுப் பிடிப்பு நோயினால் வரும் தொடை வலியா அல்லது இடுப்புமூட்டுத் தேய்மானத்தால்வந்த வலியா என்பதைப் பெரும்பாலும்; கண்டுபிடித்துவிட முடியும்.

* இடுப்பு மூட்டு தேய்மானத்தின் காரணமாகத் தொந்தரவு என்றால் தொடையின் உள்பகுதியிலோ, கால்மூட்டின் உள்ளேயோ வலி ஏற்படக்கூடும். ஆனால் தொடை வலியுடன் மரத்துப் போகாது.

* நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும் அங்கே பிடித்துக் கொள்வதுபோல் இருந்து நடக்க நடக்க வலி அதிகமாகலம்.

* ஆனால் முதுகுச் சிக்கலால் ஏற்பட்டால் தொடையிலிருந்து கால் வரை 'சுரீர்" என்று இழுக்கும் உணர்வு ஏற்படும். கணுக்கால் வரை பரவும். முதுகைச் சற்று திருப்பினாலோ குனிந்து வேலை செய்தாலோ இது அதிகமாகும்.

* 'ஸியாடிகா' எனும் இந்த வலி இருமினாலோ தும்மினாலோ அதிகரிக்கும். படுத்த பிறகு கொஞ்சம் குறைந்து, புரண்டு விட்டு எழுந்திருக்கும் போது இந்த வலி அதிகரிக்கும்.

* காலில் "ஜிவ்' எனத் தோன்றிய இந்த வலி, காலைச் சற்று மடித்து வைத்தால் குறைந்ததுபோல் இருக்கும். முதுகுக்கு பிஸியோதெரபி தருவது மூலமாகவோ, மாத்திரைகள் மூலமாகவோ இந்த வலியைக் குறைக்கமுடியும்.

* வலி குறைந்தவுடன் தொப்பை இருப்பவர்கள் அதைக் குறைக்க வேண்டும். முன்பு வலி ஏற்பட்டதே என்பதையே நினைத்துக்கொண்டு சோம்பலாக இருக்காமல் வேலைகளை இயன்ற அளவு சுறுசுறுப்பாகப் பார்த்து ஊளைச்சதையை ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே சிலருக்குத் தானாகவே சரியாகிவிடும்.

* மேலே குறிப்பிட்ட அத்தனையையும் செய்து, கால் வலியும் தொடர்ந்தால் சிறப்பு சிகிச்சைதான் செய்தாக வேண்டும். முன்பெல்லாம் முதுகில் ஊசியால் குத்தி, மைலோகிராம் எனப்படும் ஒருவித வேதனையான சோதனையைச் செய்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. எந்த ஒரு சோதனையும் வலிக்கு மாற்றாக அமைய வேண்டுமே தவிர அதுவே அதிக வலியை அளிப்பதாக இருந்துவிடக் கூடாது.

* நல்லவேளையாக இப்போது எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் வந்துவிட்டது. முதுகெலும்பின் உள்ளே உள்ள நரம்புகள், தசை மற்றும் தசைநார்களின் தன்மையை இதன் மூலம் அறிய முடியும். நரம்புக்குள்ளும் பாதிப்பு இருந்தாலோ, நரம்புக் குழாயின் அளவு குறித்தோ இதன் மூலம்கண்டறிய முடியும்.

* ஜவ்வு மிகவும் விலகி இருந்தாலோ, நரம்புக்குள் ரத்த ஓட்டம் குறைந்து தண்டுவடத்தில் கட்டி போல் உருவாகியிருந்தாலோ எம்.ஆர்.ஐ. ஸ்கானின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இலேசான வலி என்றால் முதுகில் எபிட்யூரல் ஸ்டீராய்ட் எனும் ஊசி மருந்தைச் செலுத்தி சிலரது கால் வலியைக் குறைக்க முடியும்.

* ஆனால், தொடைவலி அல்லது கால் வலி மிகவும் அதிகமாகப் போய்த் தூங்கமுடியாத அளவுக்கு வலி அதிகமானாலோ கூடவே கால் மரத்துப் போனாலோ கீழ்முதுகில் ஒரு சிறிய ஆபரேஷன் செய்வது அவசியமாகிறது.

நகர்ந்து போன ஜவ்வை அகற்ற வேண்டியிருக்கும். அல்லது முதுகெலும்பிலிருந்து
குறிப்பிட்ட நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக்கும் திசுக்களை அகற்ற வேண்டி இருக்கும். அப்போது தான் கால் மற்றும் இடுப்பு வலி குறையும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum