தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மணக்குள விநாயகர் கோவில்

Go down

 மணக்குள விநாயகர் கோவில்  Empty மணக்குள விநாயகர் கோவில்

Post  amma Mon Jan 14, 2013 3:28 pm



முழுமுதற் கடவுளாக இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் பொதுவாக தனியாகத்தான் எழுந்தருளி அருள்பாலிப்பார். மிக அரிதாக சித்தி, புத்தியை மனைவியராக கொண்ட திருக்கோலத்தில் அருள்வார். அவ்வாறு மிக அரிதாக அமைந்த கோவில்களுள் ஒன்றுதான் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில்.

இந்தியாவிலேயே கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட ஒரே விநாயகர் கோவில் இது. விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பதும் இங்கு மட்டுமே! ஒருமுறை பிரெஞ்சு அதிகாரி ஒருவன், இக்கோவில் விநாயகர் சிலையை எடுத்து நடுக்கடலில் கொண்டு போய் போட்டுவிட்டான்.

காலையில் கோவிலுக்கு வந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அவன் எந்த சிலையை நடுக்கடலில் கொண்டுபோய் போட்டானோ, அதே சிலை கோவிலில் ஏற்கனவே இருந்த இடத்தில் அப்படியே இருந்தது. மணக்குள விநாயகரின் சக்தியை நேரில் கண்ட அவன், கடைசியில் அந்த விநாயகரின் பக்தனாகவே மாறி விட்டான்.

பாரதியார் புதுச்சேரியில் வசித்தபோது மணக்குள விநாயகர் மேல் மாறாத அன்பு கொண்டிருந்தார். அவர் இந்த விநாயகரின் மேல் கொண்ட பற்றின் காரணமாக, `மணற்குள விநாயகர் நான்மணிமாலை' என்ற நூலை எழுதியுள்ளார்.

அதில், ஒரு பாடலில் அந்த விநாயகருக்கு தங்கத்தால் கோவில் கட்டுவேன், அதற்கு நீ என்னை வாழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அன்று அவர் கண்ட கனவு இன்று நனவாகிவிட்டது. ஆம்... இக்கோவிலின் கருவறைக் கோபுரம் தற்போது பொன்னால் வேயப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதன் மூலம் பக்தர்களின் எல்லாவிதமான பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன. கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது.

தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், திருமண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு அதிக அளவில் வருகின்றனர். இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் இங்கு வந்து வழிபடுவது எங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும்.

போக்குவரத்து வசதி:

புதுச்சேரி கடற்கரையோரம் உள்ள அரவிந்தர் ஆசிரமம் அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அனைத்து பஸ்களும் இந்த கோவிலுக்கு செல்லும்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் பாண்டிச்சேரி சென்று பின் அங்கிருந்து பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum