தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரம்ம ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்

Go down

பிரம்ம ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் Empty பிரம்ம ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்

Post  amma Mon Jan 14, 2013 3:27 pm



ஸ்தல வரலாறு:

தஞ்சாவூர் மாவட்டம் கீழக்கொருக்கையில் அமைந்துள்ள பிரம்மஞான புரீஸ்வரர்கோவில். இந்த கோயில் பிரசாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், மனைவியுடன் அதிகார நந்தி, இரட்டை பைரவர், சூரியன், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் சன்னதி உள்ளது.

இக்கோயிலுக்கு அருகில் பட்டீஸ்வரம் துர்க்கை தாராசுரம் கோயில்கள் உள்ளன. அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கல்வியில் சிறக்க, திருமண தடை நீங்க, மூளைவளர்ச்சி, குடும்ப ஒற்றுமை வளர இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

முந்திரிப் பருப்பு, நிலக்கடலை இரண்டடையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். கோயில் மிகவும் சிதிலமடைந்துள்ளது.

அவிட்டம் நட்சத்திர தலம்:

பிரம்மனுக்கு அவிட்ட நட்சத்திர தினத்தில் ஞானம் கிடைத்தால் இத்தலம் அவிட்ட நட்சத்திரத்திற்குறிய தலமானது. எனவே தான் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ ஆவணி அவிட்டத்தன்றோ இங்கு வந்து அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம்.

குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தியாக இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. கைரேகை போல காலுக்கும் ரேகை உண்டு. இந்த கால் ரேகை இத்தலத்தில் படும்படி அவிட்டம் நட்சத்திரத்திர நாளில் அடிப்பிரதட்சணம் செய்வது சிறப்பு

வரலாறு:

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. கோரக்க சித்தர் சிவாலய யாத்திரை சென்ற போது இத்தலத்திற்கு வந்தார். ஒரு மடத்தில் அவர் தங்கியிருந்தனர். அசதியில் நன்றாக உறங்கி விட்டார். நள்ளிரவில் திடீரென விழிப்பு தட்டவே கோரக்கருக்கு அதிச்சி காத்திருந்தது.

தன் அருகில் ஒரு பெண் படுத்திருப்பதையும், அவளது சேலைத் தலைப்பு தன் மேல் கடப்பதையும் கண்டு மிகவும் வருந்தினார். இதற்கு பிராயச்சிந்தமாக தன் இரு கைகளையும் வெட்டி விட்டார். பின் அந்த மடத்திலேயே சில காலம் தங்கி, அங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, வெட்டுப்பட்ட கைகளால் தாளம் போட்டு, ஞானபுரீஸ்வரரையும் புஷ்பல்லியையும் வணங்கி வந்தார்.

கோரக்கரின் பக்தியிலே மகிழ்ந்தார் சிவன். சிவினின் அருளால் சித்தருக்கு மீண்டும் கை கிடைத்தது. கோரக்கரின் கை வெட்டப்பட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு கோரக்கை எனவும், தனது குறுகிய கைகளால் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொருக்கை என மாறி விட்டது. சுவாமி பெயர்க்காரணம் பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைபட அசுரர்கள் கடலுக்கடியில் ஒளித்து வைத்தனர். இதை மகாவிஷ்ணு மீட்டுக்கொடுத்தார்.

இருந்தாலும் பிரம்மனால் முன்பு போல இயல்பாக படைப்புத் தொழிலை செய்ய முடியவில்லை. எனவே அவர் விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து சந்திர புஷ்கரிணியில் நீராடி அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில் சிவன் பிரம்மனுக்கு ஞானம் கொடுத்தார்.

இதனால் பிரம்மா மீண்டும் சிறப்பாக படைப்புத் தொழில் புரிந்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மஞானபுரீஸ்வரர் ஆனார். அதிசயத்தின் அடிப்படையில் இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சிவனுக்கும் அம்மனுக்கும் எதிரில் உள்ள உள்ள இரண்டு நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது சிறப்பு.

போக்குவரத்துக்கு வசதி:

இந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள கீழக்கொருக்கையில் அமைத்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதியும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் வசதியும் உள்ளது. முதலில் தஞ்சாவூர் சென்று பின் உள்ளூர் பேருந்து மூலம் கீழக்கொருக்கையில் உள்ள இந்த கோவிலுக்கு செல்லலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum