தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வயிறு வலியா... கவனமாக இருங்கள்..

Go down

 வயிறு வலியா... கவனமாக இருங்கள்..  Empty வயிறு வலியா... கவனமாக இருங்கள்..

Post  ishwarya Wed Feb 27, 2013 12:25 pm

உண்ணும் உணவு அளவுக்கு அதிகமான சுவையுடன் இருந்தாலும் சரி, அதிக பசியுடன் இருந்தாலும் சரி, அப்போது உண்ணும் உணவின் அளவே தெரியாது. அவ்வாறு அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பிறகு, உடல் அதிக சோர்வுடன் அல்லது எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருப்போம். இது எப்போதும் நடக்கும் செயல்தான். ஆனால் நம் வயிற்றின் அளவை மீறி சாப்பிடும் போது, அந்த உணவு செரிமானமடைய நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது. மேலும், உடலில் உள்ள அனைத்து எனர்ஜிகளும் அந்த உணவு பொருட்களை சரிமானமடையச் செய்யும் வேலையில் ஈடுபடும். ஆகவே தான் உடலில் அதிக சோர்வும், தூக்கமும் வருகிறது.

ஆனால், சிலருக்கு சாப்பிட்ட பிறகு, கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதிலும் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு உட்காரவே முடியாத நிலையில் இருக்கும். அவ்வாறு அடிவயிற்றில் அதிகவலி ஏற்பட்டால் அதற்கு வாயு, செரிமானமின்மை என நிறைய காரணங்கள் உள்ளது. வயிறு வலிக்கும் போது வலதுபுறத்தில் வலி ஏற்பட்டால் சிறுநீரகத்தில் கல், அப்பெண்டிக்ஸ் அல்லது அல்சர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று இருக்கிறது என அர்த்தம். அதுவே இடதுபுறத்தில் வலி ஏற்பட்டால், குடலில் புண்(அதிக வலி இருந்தால் குடல் புற்றுநோய்), குழாய்களில் ஏதேனும் சதை வளர்ச்சி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் என்பதற்கான அறிகுறிகளாகும்.

சாப்பிட்டபின் அடிவயிற்றில் எதற்கு வலி ஏற்படுகிறது. குடலியக்கத்தில் எரிச்சல்:

உடலில் குடலியக்கம் சரியாக இயங்கவில்லை என்றால், உண்ட பின்பு வயிற்றில் வலி ஏற்படும். எப்போது குடலியக்கம் சரியாக இயங்கவில்லையோ, அப்போது பெருங்குடலில் பெரும் வலியை உண்டாக்கும். எப்போது உடலில் வாயு அதிகமாக உள்ளதோ அப்போது வயிற்றில் ஒருவித வீக்கம் ஏற்படுவது போல் இருக்கும். எரிச்சல் வரும். வயிற்றில் புண் இருப்பது தான் இதற்கு காரணம். இதனால் வயிற்றில் வலி, வாந்தி, மற்றும் வயிற்று போக்கு ஏற்படுகிறது.

மலச்சிக்கல்:

மலச்சிக்கலும் வயிற்றுவலியை உண்டாக்கும். அதிலும் எப்போது குடலின் இயக்கம் சரியாக இயங்காமல், மிகவும் வலுவுற்று இருக்கிறதோ, அப்போது அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும். அந்த நேரத்தில் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல் தங்கி விடுகிறது. உணவு சாப்பிட்ட பின் வயிற்று வலி ஏற்பட்டால் அதற்கு அல்சர் தான் முக்கிய காரணமாக இருக்கும். அல்சரும் ஒரு வகை புண் தான். வயிறு, குடல் அல்லது முன் சிறுகுடல் போன்றவற்றில் தான் அல்சர் இருக்கும். வயிற்றில் உள்ள அமிலம் மற்றும் உணவு பொருட்கள் அல்சர் உள்ள பகுதியில் படும்போது வலி ஏற்படும்.

வலியை தடுப்பது எப்படி?:

ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை விட சிறு, சிறு இடைவெளி விட்டு உணவு சாப்பிட்டு வந்தால் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிடவேண்டும். இப்படி சாப்பிடும்போது செரிமானம் விரைவில் நடைபெற்று உடல் எடையும் குறையும். வேகமாக சாப்பிட்டால் உடலில் உள்ள செயல்பாடு அனைத்தும் பாதிக்கப்பட்டு வலியை ஏற்படுத்தும்.

எனவே சரியான அளவில் சாப்பிட்டு அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும். அதன் பின்னரும் வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகவேண்டும்.
எப்போது உடலில் வாயு அதிகமாக உள்ளதோ அப்போது வயிற்றில் ஒருவித வீக்கம் ஏற்படுவது போல் இருக்கும். எரிச்சல் வரும். வயிற்றில் புண் இருப்பது தான் இதற்கு காரணம். இதனால் வயிற்றில் வலி, வாந்தி, மற்றும் வயிற்று போக்கு ஏற்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum