தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓணம் பண்டிகையின் உணவு

Go down

ஓணம் பண்டிகையின் உணவு Empty ஓணம் பண்டிகையின் உணவு

Post  ishwarya Wed Feb 20, 2013 5:14 pm

திருவோணம் !!! அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்....கேரள மக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் பண்டிகையான ஓணம், அவர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும்.

இது அறுவடைநாள் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
மலையாள மாதமான "சிங்கம்"( ஆகஸ்ட் - செப்டம்பர் ) மாதத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என்று பத்து நட்சத்திரத்தில், பத்து நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கடைசி நாளான திருவோணம் அன்று விழா இன்னும் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது.


இதன் சிறப்பாக கேரள மக்கள், தங்கள் இல்லங்கள் முன்பாக அத்தப்பூ கோலமிடுவர். இந்த 10 நாட்களிலும் கேரள பாரம்பரியத்தோடு நடனம், விளையாட்டு ஆகியவை இடம்பெறும். பண்டிகையின் போது ஓணம் சிறப்பு உணவு ( Onam Sadhya) பரிமாறப்படுகிறது.

விழாவின் வரலாறு

முந்தைய காலத்தில் கேரளாவை மகாபலி சக்கரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் குறையின்றி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். வாமனன் என்னும் குள்ள அவதாரத்தில் வந்து, 3 அடி நிலம் கேட்ட விஷ்ணு பகவானுக்கு, மூன்றாவது அடியாக தன் தலையையே கொடுத்தவன் தான் இந்த மகாபலி.

பின்னர், முக்தி பெற்ற பிறகும் ஆண்டுக்கு ஒரு முறை தனது நாட்டு மக்களை காணும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று கேட்டார். பகவானும் அவ்வாறே அருளினார். இதன்படி ஆண்டுதோறும் நாட்டு மக்களை காண வரும் மகாபலியை வரவேற்கும் பொருட்டு இப்பண்டிகையை கேரள மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

மொத்தத்தில், ஓணம் பண்டிகை கேரளாவின் ஓர் அழகுத் திருவிழா !

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum