தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பவுஞ்சூர் அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலம்

Go down

பவுஞ்சூர் அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலம் Empty பவுஞ்சூர் அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலம்

Post  ishwarya Sat Feb 16, 2013 5:28 pm

மதுராந்தகம்: பவுஞ்சூர் அருகே பெரிய வெளிக்காடு கிராமத்தில் வெக்காளியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலமாக நடந்தது. மதுராந்தகம் அடுத்த
பவுஞ்சூர் அருகே பெரிய வெளிக்காடு கிராமத்தில் வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் காப்பு
நிகழ்ச்சி, விநாயகர் பூஜை, அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் அம்மனுக்கு ஆலம் கரைத்து ஆரத்தி எடுத்து தீபாராதனை செய்தனர். அடுத்து வளையல் மாலை அணிவித்து, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பல்வேறு
வகையான சாதம் படையல் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம், பெண்களுக்கு குங்கும பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சுந்தரவரதன் செய்திருந்தார். வரும் 27ம் தேதி முதல் 3 நாட்கள் வெக்காளியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum