திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
Page 1 of 1
திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபப்பெருவிழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான மகா தீபம் உற்சவம் இன்று நடக்கிறது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
மலை மீது மகா தீபம் ஏற்றும்போது, அண்ணாமலையார் கோயில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வார்கள். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் எழுந்தருளி 3ம் பிரகாரத்தில் காட்சியளிப்பார். அப்போது, கோயில் கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயிலில் இருந்து மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர். சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை பருவத ராஜகுல மரபினர் தலைச்சுமையாக கொண்டு சேர்த்தனர்.
ஏற்கனவே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலில் வைத்துள்ள தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை இன்று காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாலை ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் பிரகாசிக்கும். தீபத் திருவிழாவுக்காக 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2 ரயில்களுக்கு சிறப்பு நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன் தலைமையில், 3 டிஐஜிக்கள், 12 எஸ்.பி., க்கள், 250 கமாண்டோ போலீசார் உள்பட சுமார் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதை, தீபம் ஏற்றும் மலை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயிலுக்குள் நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும், மோப்ப நாய் மூலம் சோதனைகள் நடந்தன. கோயில், மாட வீதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 70 ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், ஆளில்லாத சிறிய ரக விமானம் மூலம் கோயில் உள்ளிட்ட இடங்களை போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, 3 இடங்களில் கட்டுப்பாடு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
கிரிவலம் செல்ல உகந்த நேரம்
மகா தீபத்திருவிழாவான இன்று (27ம் தேதி) மாலை 6.26 மணி தொடங்கி, நாளை (28ம் தேதி) இரவு 8.29 மணி வரை கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மலை மீது மகா தீபம் ஏற்றும்போது, அண்ணாமலையார் கோயில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வார்கள். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் எழுந்தருளி 3ம் பிரகாரத்தில் காட்சியளிப்பார். அப்போது, கோயில் கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயிலில் இருந்து மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர். சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை பருவத ராஜகுல மரபினர் தலைச்சுமையாக கொண்டு சேர்த்தனர்.
ஏற்கனவே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலில் வைத்துள்ள தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை இன்று காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாலை ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் பிரகாசிக்கும். தீபத் திருவிழாவுக்காக 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2 ரயில்களுக்கு சிறப்பு நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன் தலைமையில், 3 டிஐஜிக்கள், 12 எஸ்.பி., க்கள், 250 கமாண்டோ போலீசார் உள்பட சுமார் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணாமலையார் கோயில், கிரிவலப்பாதை, தீபம் ஏற்றும் மலை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயிலுக்குள் நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும், மோப்ப நாய் மூலம் சோதனைகள் நடந்தன. கோயில், மாட வீதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 70 ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், ஆளில்லாத சிறிய ரக விமானம் மூலம் கோயில் உள்ளிட்ட இடங்களை போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, 3 இடங்களில் கட்டுப்பாடு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
கிரிவலம் செல்ல உகந்த நேரம்
மகா தீபத்திருவிழாவான இன்று (27ம் தேதி) மாலை 6.26 மணி தொடங்கி, நாளை (28ம் தேதி) இரவு 8.29 மணி வரை கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருச்செந்தூரில் இன்று மாசித் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
» சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
» சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
» சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர் : மண்டல கால பூஜை கோலாகலமாக முடிந்தது
» அய்யா வைகுண்டர் அவதார தின விழா : சாமித்தோப்பில் பக்தர்கள் குவிந்தனர்
» சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
» சுசீந்திரம் கோயிலில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
» சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர் : மண்டல கால பூஜை கோலாகலமாக முடிந்தது
» அய்யா வைகுண்டர் அவதார தின விழா : சாமித்தோப்பில் பக்தர்கள் குவிந்தனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum