தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

Go down

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம் Empty சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

Post  ishwarya Sat Feb 16, 2013 1:28 pm

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் மேளதாளம் முழங்க தேவாரம், திருவாசகம் பாட உற்சவ ஆச்சாரியார் கொடியேற்றுகிறார். இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் பிரகாரங்களில் வீதியுலா நடைபெறும். இரவு பஞ்சமூர்த்தி கள் தங்க, வெள்ளி மஞ்சங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெறும்.

23ம் தேதி இரவு வெள்ளி, ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் நடக்கும். 26ம் தேதி இரவு தங்க ரதத்தில் பிச்சாடனர் வெட்டும் குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறும். 27ம் தேதி காலையில் தேர்த்திருவிழாவும் இரவு 8 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் ஏக கால லட்சார்ச்சனை யும் நடைபெறும். 28ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ராஜ சபை என்கின்ற ஆயிரங்கால மண்டபத்தின் முகப்பில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜ மூர்த்திக்கும் மகா அபிஷேகம் நடைபெறும்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளும், நடராஜமூர்த்தியும் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். காலை சிற்சபையில் ரகசிய பூஜை நடைபெறும். இதையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், தீர்த்தவாரியும் நடைபெறும். சிவகாம சுந்தரியும், நடராஜமூர்த்தியும் நடனமாடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சிற்சபைக்கு செல்வார்கள். 29ம் தேதி முத்து பல்லக்கில் வீதியுலாவும், 30ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum