தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது

Go down

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது Empty சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது

Post  ishwarya Sat Feb 16, 2013 1:27 pm

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 27-ம் தேதி தேர்த் திருவிழா நடக்கிறது. சைவ கோயில்களில் புகழ்பெற்று விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழா நடக்கும். இந்த ஆண்டுக்கான விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணியளவில் தேவாரம், திருவாசகம் முழங்க கோயில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கொடி ஏற்றினார். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். உற்சவம் 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் பகல் மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கும்.

23-ம் தேதி இரவு வெள்ளி, ரிஷப வாகனத்தில் தெருவடைச்சானும், புதன்கிழமை இரவு தங்க ரதத்தில் பிச்சாடனர் வெட்டு குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 27-ம் தேதி முக்கிய உற்சவமான தேர்த் திருவிழா நடக்கிறது. அன்றிரவு சிவகாமசுந்தரி அம்பாளும், நடராஜரும் ஆயிரங்கால் மண்டப முகப்பில் எழுந்தருள்வர். அங்கு ஏக கால லட்சார்ச்சனை நடக்கும். மறுநாள் மதியம் 12 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனமாடி பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு சிற்சபைக்கு செல்வர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum