தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்லப் பிராணிகளோட என்னென்ன முக்கியமா ஷேர் பண்ணலாம்!!!

Go down

செல்லப் பிராணிகளோட என்னென்ன முக்கியமா ஷேர் பண்ணலாம்!!! Empty செல்லப் பிராணிகளோட என்னென்ன முக்கியமா ஷேர் பண்ணலாம்!!!

Post  ishwarya Tue Feb 12, 2013 5:53 pm



வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது, நிறைய பொருட்களை அதனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதுவும் உங்கள் வீட்டின் ஒருவராக இருக்கும் போது, உங்களுடன் நிறைய இடங்களில், வேலைகளில் ஈடுபடும். அவ்வாறு ஈடுபடும் போது எந்தெந்த பொருட்களை அதனுடன் பகிர்ந்து கொண்டால், அது சந்தோஷமாக இருக்கும் என்பதை சரியாக தெரிந்து கொண்டு, பின்னர் அதனை வளர்க்க ஆரம்பித்தால், எந்த ஒரு கவலையுமின்றி நம்மிடமிருக்கும் பொருட்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அது என்னென்ன பொருட்கள் என்று பார்ப்போமா!!!

Things To Share With Your Pet
* செல்லப்பிராணிகள் வீட்டில் ஒருவராக இருக்கும் போது, குடும்பத்தினருடன் மெத்தையில் படுக்க வேண்டும் என்று நினைக்கும். எப்போதெல்லாம் தூங்க செல்கின்றோமோ, அப்போதெல்லாம் அதுவும் பின்னாடியே வந்து படுக்கும். ஆகவே தனியாக படுக்கிறீர்கள் என்றால், அதனை தம்முடன் படுக்க வைப்பது என்பது தவறானது அல்ல. எனவே பயப்படாமல் அதனுடன் தூங்கலாம்.

* நாய்கள் தரையில் படுக்கும் போது மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும். ஆகவே வீட்டில் இருக்கும் சாக்ஸை அதன் கால்களில் மாட்டிவிட்டால், அதற்கு சற்று இதமாக இருக்கும். மேலும் நாய்கள் படுக்கும் முன்பு, அதன் கால்களில் சாக்ஸை மாட்டி விடுங்கள். இதனால் செல்ல நாய்கள் நிம்மதியான தூக்கத்தை பெறும்.

* உண்ணும் உணவை செல்ல நாய்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மிகவும் நல்லது. ஏனெனில் நாய்களுக்கு அதற்காக கடைகளில் விற்கும் உணவுகளை விரும்பி சாப்பிடுவதை விட, வீட்டில் சமைக்கும் உணவுகளைத் தான் விரும்பி சாப்பிடும், அதிலும் அந்த உணவுகளை தட்டில் வைத்து கொடுக்கும் போது, அங்கும் இங்கும் குதித்து சந்தோஷமாக விளையாடி உண்ணும். மேலும் நாய்களுக்கு கொடுக்கும் உணவுகளை பார்த்து, அவற்றிற்கு கொடுக்கக் கூடியது தானா என்பதை நன்கு அறிந்து பின்பு கொடுக்க வேண்டும். உதாரணமாக நாய்கள் சாதம், பிரட், மோர், தயிர் என்பதை சாப்பிடலாம். ஆனால் ஒரு சில உணவுகளை சாப்பிட்டால், நாய்களுக்கு அலர்ஜி ஏற்படும். ஆகவே நன்கு தெரிந்து கொண்டு பின்னர் கொடுங்கள்.

* நாய்களும் ஒரு சிறு குழந்தை போல் தான். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செல்லப் பிராணி எது என்று பார்த்தால், அது நாய் தான். அதிலும் நாய்களுக்கு எந்த ஒரு விளையாட்டு பொருட்கள் என்றாலும் ஆசையோடு நன்கு விளையாடும். மேலும் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், நாய்களுக்கு விளையாட்டுப் பொருட்களை கொடுக்க வேண்டாம். இதனால் குழந்தைகளும் அந்த விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடி, பின் அவர்களுக்கு ஏதேனும் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஆகவே மேற்கூறியவற்றை மனதில் கொண்டு, நாய்களை வளர்த்து, அதனுடன் பகிர்ந்து வந்தால், நாய்கள் நன்கு சந்தோஷமாக இருப்பதோடு, நாமும் எந்த ஒரு பயமும் இல்லாமல் இருக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum