தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலேரியா : அதிக மருந்து ஆபத்தாகும் - ஆய்வு எச்சரிக்கை!

Go down

மலேரியா : அதிக மருந்து ஆபத்தாகும் - ஆய்வு எச்சரிக்கை!  Empty மலேரியா : அதிக மருந்து ஆபத்தாகும் - ஆய்வு எச்சரிக்கை!

Post  meenu Tue Feb 12, 2013 5:01 pm

மலேரியா நோயைக் குணப்படுத்த நமது உடலில் செலுத்தப்படும் மருந்துகள், கூடுதலாக செலுத்தப்பட்டால் அது நோயை அப்புறப்படுத்துவதை விட்டுவிட்டு மலேரியாவை ஏற்படுத்தும் கிரிமிகளின் சக்தியை அதிகரிக்கிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனவே நோயை குணப்படுத்தக் கூடிய அளவு மருந்துகளை பயன்படுத்தினால் உடலுக்கு நல்லது என்றும், அதிகமாக பயன்படுத்துவது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின்படி, தேவையான அளவு மருந்து நோயாளியின் உடலில் செலுத்தப்படும் போது, மருந்துகளின் நோய் எதிர்ப்பு தன்மை படிப்படியாக விரிவடைவதோடு, நோயாளியின் உடல் நலனும் படிப்படியாக தேறிவரும். உடலில் மருந்து செலுத்தப்படாத நிலையில், நோய்க்கிருமிகளை அழிக்கும் எதிர்ப்பு காரணிகளில் இருந்து சந்தேகத்திற்குரிய நோய்க் கிருமிகள் விலகியே இருக்கும். ஆனால் மருந்து உடலில் செலுத்தப்படும் போது இந்நிலை மாறும் என்று பெஃன் ஸ்டேட் உயிரியல் துறை பேராசிரியரும், தொற்றுநோய் ஆய்வு மையத்தின் இணை ஆராய்ச்சியாளருமான ஆண்ட்ரூ ரீட் தெரிவித்துள்ளார்.

மருந்துகள் உடலில் சென்றவுடன் ஒட்டுயிர்கள், சந்தேகத்திற்குரிய நுண்ணுயிரிகளைஅழிக்க உதவுகிறது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை ஒட்டுயிரிகளின் பெருக்கம் நிறைவு செய்கின்றது. இதற்கான பரிசோதனையை மலேரியா நோய்க் கிருமியால் தாக்குதலுக்கு ஆளான எலியில் மேற்கொண்டபோது, மருந்து எலியின் உடலில் சென்றடைந்தவுடன், அங்கிருந்த நுண்ணுயிரிகளை அழித்தது. அதனைத் தொடர்ந்து நோய் எதிர்ப்பு முலக்கூறுகள் இரட்டிப்பானது. அதாவது, நுண்ணுயிரிகள் அதன் உடலில் அழிக்கப்படாத போது இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகமானதைக் காணமுடிந்ததாக ஆண்ட்ரூ ரீட் கூறியுள்ளர்.

அதிகப்படியான மருந்துகளை உட்கொள்வதால், மருந்துகளின் எதிர்ப்புத்தன்மை உருவாக்கத்தை வெகுவாகப் பாதித்துவிடும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியின் பரவல் விகிதாசாரத்தை அதிகரித்துவிடும். எனவே மருந்துகளை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், தேவையான அளவு மருந்து நோயைக் குணப்படுத்த போதுமானது என்றும் ஆண்ட்ரூ ரீட் கூறியுள்ளர்.

மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் காலத்திற்கும், ஒட்டுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் தொடர்புள்ளது. நோய் எதிர்ப்பு ஒட்டுயிரிகளின் எதிர்க் காரணிகள் அழிக்கப் பட்டுவிட்டதால், ஒட்டுயிரிகள் வாழ்வதுடன் முன்பைவிட கூடுதல் ஆற்றலுடன் செயல்படும்.

குறைந்த கால அளவுக் கொண்ட மலேரியா நோய் எதிர்ப்பு மருந்துகளின் வீரியம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஆண்ட்ரூ ரீட் கூறினார். எலியில் காணப்பட்ட தொற்றுநோய்க் கிருமிகள் மலேரியா தாக்கிய மனிதர்களிடத்திலும் காணப்படும் நிலையில், இந்த ஆய்வு முடிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் மெதுவாக பரவுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum