தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தை பெற்ற பின்னும் அம்மாவுக்கு கவனம் தேவை!

Go down

குழந்தை பெற்ற பின்னும் அம்மாவுக்கு கவனம் தேவை! Empty குழந்தை பெற்ற பின்னும் அம்மாவுக்கு கவனம் தேவை!

Post  ishwarya Mon Feb 11, 2013 2:17 pm

Postnatal Diet Tips
பத்துமாதம் குழந்தையை கருவில் சுமந்து சுகமாய் பிரசவம் நடந்து விட்டது. அப்புறம் என்ன ஜாலியாய் இருக்கலாமே என்று நினைக்க முடியாது. ஏனெனில் குழந்தை பெற்ற தாயின் உடம்பை பச்சை உடம்பு என்று சொல்லுவார்கள். உடம்பில் உள்ள தோல் மிகவும் மென்மையாய் இருக்கும். பிரசவ சமையத்தில் அதிக அளவு ரத்தம் வெளியேறுவதால் உடலில் சத்துக்கள் குறைந்து போயிருக்கும். அதனால்தான் குழந்தை பெற்ற தாய்மார்களை தனிகவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும், அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

பிரசவித்த பெண்களின் உடலில் நீர்ச்சத்து எப்பொழுதும் சமமாக இருக்க வேண்டும். எனவே நன்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிக அளவு குடிக்க கொடுக்கலாம். இதனால் தாய்பால் சுரப்பதில் குறைபாடு ஏற்படாது. இது உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்கவும் உதவும்.

உண்ணும் உணவு ஜீரணமாகவில்லை எனில் அந்த உணவை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள். அதோடு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் நிறைந்த புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற உணவுகளை கொடுக்கலாம். அதேபோல் உயர்தர வைட்டமின்கள் அடங்கிய கேரட், பீட்ரூட், சேனை, போன்றவைகளை கட்டாயம் உண்ணக்கொடுக்கலாம்.

பச்சை நிற உணவுகளை கட்டாயம் உண்ணக்கொடுக்க வேண்டும். வெந்தயக்கீரை, வெள்ளைப்பூண்டு போன்றவைகளை பிரசவித்த பெண்கள் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அதேபோல் முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளையும் நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.

புரதச்சத்து நிறைந்த முட்டையை தினசரி காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல் அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது சோர்வடையாமல் தடுக்கும்.

பிரசவித்த பெண்கள் பாலூட்டுவதனால் அடிக்கடி பசிக்கும் அந்த நேரத்தில் பழங்கள், காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். பசிக்கிறதே என்பதற்காக எண்ணெயில் பொரித்த காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் உபயோகப்படுத்தும் இடங்களில் மிளகினை உபயோகிக்கலாம். குழந்தை பிறந்த உடன் தாய்மார்கள் சாப்பிடும் சரியான உணவுதான் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும் என்கின்றனர்

மகப்பேறு மருத்துவர்கள்.

பிரசவமான பெண்களுக்கு வயிறு பெரிதாகவே இருக்கும். இவர்கள் பிரசவ‌ம் ஆனவுட‌ன் வ‌யி‌ற்‌றி‌ன் சதையை‌க் குறை‌க்க எ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌ம் முடியுமோ அ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌த்‌தி‌ல் உட‌ற்ப‌யி‌ற்‌சியை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம். தொட‌ர்‌ச்‌சியாக ஆறு மாத‌ம் ப‌யி‌ற்‌சி செ‌ய்தா‌ல் வ‌யி‌ற்று‌ச் சதை குறை‌ந்து‌விடு‌ம்.

அதே‌ப் போல வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ப்‌பிய‌ப் பகு‌தி‌யி‌ல் மெ‌ன்மையான து‌ணியை பெ‌ல்‌ட் போல மடி‌த்து லேசாக இறு‌க்‌கி அ‌ணிவது‌ம், பெ‌ல்‌ட் வா‌ங்‌கி அ‌ணிவது‌ம் ந‌ல்லதுதா‌ன். பல மரு‌த்துவமனைக‌ளிலு‌ம், வ‌யி‌ற்‌றி‌ல் சதையை‌க் குறை‌க்க ப‌யி‌ற்‌சிகளை ‌சிற‌ப்பு ‌நிபுண‌ர்களை‌க் கொ‌ண்டு நட‌த்த‌ப்படு‌கிறது. அதனை கவனித்து சரியான முறையில் பயிற்‌‌சியை செ‌ய்து வ‌ந்தா‌ல் பெரிதான வயிறு படிப்படியாக குறையும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் குழ‌ந்தை ‌பிற‌ந்தது‌ம் இழந்த சத்தினை திரும்ப பெறவேண்டும் என்பதற்காக க‌ண்டப‌டி சா‌ப்‌பி‌ட்டு உட‌ல் எடையை‌ அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் வழ‌க்க‌‌த்தையு‌ம் மா‌ற்று‌ங்க‌ள் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum