தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரசவத்திற்கு பின் ஒல்லியாகணுமா? கொஞ்சம் கவனிங்க!

Go down

பிரசவத்திற்கு பின் ஒல்லியாகணுமா? கொஞ்சம் கவனிங்க! Empty பிரசவத்திற்கு பின் ஒல்லியாகணுமா? கொஞ்சம் கவனிங்க!

Post  ishwarya Mon Feb 11, 2013 2:12 pm

Postnatal Care
கர்ப்பமாக இருக்கும் போது உடல் நலனை கவனிப்பதைப் போல பிரசவத்திற்குப் பின்னர் உடல் நலனை கவனிக்கத் தவறிவிடுகின்றனர் தாய்மார்கள். இதனால் உடல் குண்டாகி ஏகப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குழந்தை பிறப்பிற்குப் பின்னர் தாய்மார்கள் பின்பற்ற வேண்டியவைகள் குறித்து மகப்பேறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.

கர்ப்பமாக இருக்கும் போது எந்த அளவிற்கு கவனமாக உடலை கவனித்துக் கொள்கிறோமோ அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் உடல் நலனை அக்கறையோடு கவனித்துக் கொள்ளவேண்டும். அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் மிகவும் அவசியம்.

ஓய்வு அவசியம்

பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக் கொண்டால் தான் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு கடுமையான வேலைகள் செய்வதை சில மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

சிசேரியனுக்குப் பின்னர் தையல் போட்ட காயம் குணமாக வேண்டும் என்பதற்காகவே ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதையும் மீறி வேலை செய்தால் தையல் மீண்டும் பிரிந்து விடும் அபாயம் உள்ளது. இந்த ஓய்வே மேலும் எடை கூட வழி வகுத்து விடுகிறது.

தொப்பையை தடுக்கலாம்

அதேசமயம் பிரசவத்திற்குப் பின்னர் கொழுப்பு அதிகம் உள்ள கேக், ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்துவிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அதிக இனிப்பு பண்டங்கள் உண்பது, எண்ணெயில் பொறித்த உணவுகளையே உண்பது, பகலில் தூங்குவது போன்றவை விரைவாக வயிறு போடத் தூண்டுகின்றன.

பிரசவத்திற்குப்பின் எடை போடுவது, அதிலும் வயிற்றில் சதை போடுவது, சர்க்கரை வியாதி வருவதற்கு காரணமாகி விடுகிறது என்கின்றனர் நிபுணர்கள். பிரசவத்திற்குப்பின் கவனச் சிதறல் பிரசவத்திற்குப்பின் சரியான கவனிப்பின்மையே அநேக தாய்மார்களின் உடல் எடை கூடுவதற்கும் தொப்பை போடுவதற்கும் காரணமாகும். குறைந்தது இரண்டு பிரசவங்களுக்குப் பிறகு 10 முதல் 20 கிலோ எடை கூடி விடுகிறது.

சத்தான உணவுகள்

பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். இரும்புசத்து மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை வராமல் தடுக்க முடியும்.

தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கூட அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பழச்சாறுகளை அருந்துவதால் உடலில் தேவையற்ற கலோரிகள் சேருவது தடுக்கப்படும். சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள் அருந்துவதுதான் நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் உணவுகளை தவிர்க்கக் கூடாது. மூன்று வேளை உண்பதற்குப் பதிலாக சிறிது சிறிதாக 6 வேளை உணவாக உட்கொள்ளலாம். இடை இடையே காய்கறிகள், பழங்கள் போன்றவைகளை சாலட்களாக உட்கொள்ளலாம்.

இயற்கை வைத்தியம்

பிரசவத்திற்குப்பின்னர் ஆயில் மசாஜ், வென்னீர் குளியல், நாட்டு மருந்து பத்திய உணவு, பகல் தூக்கம் தவிர்த்தல் போன்ற இயற்கை வைத்திய முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி முழுப்பயன் அடைந்து வந்தனர். மேற்கத்திய நாடுகளில் பிரசவத்திற்குப்பின்னர் பின்பற்ற வேண்டியவற்றை மருத்துவ மனைகளில் சரியான உணவு முறைகள் மற்றும் சரியான யோக (உடற்பயிற்சி) முறைகளையும் இன்றும் சொல்லித் தருகின்றனர். ஆனால் நம் நாட்டில் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதைப்பற்றி சொல்லித்தருவதில்லை. எனவே இயற்கை வழியை பின்பற்றி முன்னோர்கள் கூறியவைகளை பின்பற்றி நடந்தால் கர்ப்பத்திற்கு முந்தைய உடல் அமைப்பை பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum