தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா

Go down

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா Empty குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா

Post  amma Sun Jan 13, 2013 2:08 pm

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நடைபெறும் நவராத்திரி கொண்டாட்டங்களில் குலசேகரப்பட்டினத்தில் நடக்கும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து சுமார் 12 கி.மீட்டர் தொலைவில் கடற்கரை ஓரத்தில் குலசேகரப்பட்டினம் உள்ளது. இங்கு ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் முத்தாரம்மனிடம் வேண்டி பலவித வேடம் பூண்டு 12 நாட்கள் காணிக்கை பெற்று தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள். அது பிரமாண்ட தசரா திருவிழாவாக நடத்தப்படுகிறது. நவராத்திரி கொண்டாட்டத்தின் 10-வது நாளான விஜயதசமி தினத்தன்று இங்கு நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண பக்தர்களிடம் ஆண்டுக்கு ஆண்டு அருள் உணர்வு அதிகரித்தப்படி உள்ளது.

கடந்த ஆண்டு குலசை தசரா திருவிழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தசரா அன்று மகிஷாசூரனை தேவி மாரியம்மன் சம்ஹாரம் செய்து பக்தர்களை காப்பாள். காளி அவதாரத்தில் முத்தாரம்மனை வணங்கும் பக்தர்கள் நோய்கள் நீங்கி நலமும், வளமும் பெறுவார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

குலசையில் உள்ள நீண்ட கடற்கரை பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து செல்ல மிகவும் உதவியாக உள்ளது. தசரா திருவிழா தினத்தன்று குலசையில் எந்த பக்கம் திரும்பினாலும் வித, விதமான வேடங்களில் பக்தர்கள் முத்தாரம்மன் அருள் வேண்டி வருவதை காணலாம். அவர்கள் நடத்தும் கலைநிகழச்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் வேறு எங்கும் நடைபெறாத இந்த தசரா திருவிழாவை காண கண்கோடி வேண்டும். குலசை முத்தாரம்மன் மீதுள்ள பற்றுதல், நம்பிக்கை காரணமாக வசதி படைத்தவர்கள் கூட முகம் மற்றும் உடம்பில் வர்ணம் பூசி சாதாரணமானவர்கள் போல மாறி நேர்ச்சையை நிறைவேற்றுவது முக்கியமான அம்சமாகும்.

சமீப காலமாக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மனை நாடிவரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. இதன் காரணமாக மைசூர் தசரா திருவிழாவையும் மிஞ்சும் வகையில் குலசை தசரா திருவிழா பக்தர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» 10 லட்சம் பேர் திரளும் தசரா திருவிழா
» குலசேகரன்பட்டணம் தசரா விழா : இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்
»  தசரா தலங்கள்
»  தசரா தலங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum