தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாமக்கல் அருகே சப்த கன்னிகளுக்கு தனி கோவில்

Go down

நாமக்கல் அருகே சப்த கன்னிகளுக்கு தனி கோவில் Empty நாமக்கல் அருகே சப்த கன்னிகளுக்கு தனி கோவில்

Post  amma Sun Jan 13, 2013 2:06 pm

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே அமைந்துள்ள ஊர் எஸ்.வாழவந்தி கிராமம். நாமக்கல்லில் இருந்து வள்ளிபுரம் வழியாக பரமத்திவேலூர் செல்லும் வழியில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற மகாமாரியம்மன், அங்காளம்மன், வரலாற்று சிறப்பு பெற்ற புன்னைவனஸ்வரர் கோயில், வரதராசபெருமாள் கோயில்கள் உள்ளன.

இங்கிருந்து சின்னகரசப்பாளையம் செல்லும் வழியில் சப்த கன்னிமார் கோயில் அமைந்துள்ளன. எஸ்.வாழவந்தியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சப்த கன்னிமார்களுக்கு என தனியாக அமைந்துள்ள கோயிலாகும். தினமும் காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மற்ற வெள்ளிக்கிழமை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கிராம தேவதை என்பதால் பெண்கள் மாலை நேரத்தில் இங்கு வந்து அவர்களாகவே சூடம் ஏற்றி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமை, தை பொங்கல் நாட்களில் வெகு சிறப்பாக பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஊருக்கு செல்ல சதர்ன், டவுன் பஸ் நெம்பர் 12, 12ஏ, 12பி ஆகிய பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்துகள் ஒரு மணிக்கு ஒரு பேருந்துகள் மட்டுமே செல்கின்றன. நாமக்கல் மாவட்டம் மோகனூரில் காளியம்மன் கோயிலில் சப்த கன்னிமார்கள் பரிவார தெய்வங்களாக உள்ளன. நாமக்கல்லில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் துரத்தில் மோகனூர் அமைந்துள்ளது.

இங்கு காவிரி ஆறு பாய்வதால் அனைத்து செல்வங்களும் சிறந்து விளங்கும் ஊராகும். மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இது மிகப்பெரிய கோயிலாகும். குடிப்பாட்டுகாரர்கள் இங்கு வந்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.

மற்ற நாட்களான மாதத்தின் அமாவாசை, தை, ஆடி மாதங்களில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். வேண்டுதல் நிறைவேறினால் அதற்கான சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.

காளியம்மன் கோயிலில் காவல் தெய்வமாகவும், பரிவார தெய்வ மாகவும் விளங் கும் சப்த கன்னி மார்களை, சுமங்கலி பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் வழிபடு வது மிகச்சிறந்த தாகும். நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்வதற்கு டவுன் பஸ் நெம்பர் 16, 16பி, 16சி மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளன.

திருச்செங்கோடு.......

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோயில் அடி வாரத்தில் சப்த கன்னிமார் கோயில் அமைந்துள்ளது. இங்கு செல்ல நாமக்கல்லில் இருந்கு ஈரோடு, கோவை செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும். நாமக்கல்லில் இருந்து சுமார் 48 கிலோ மீட்டர் தூரத்தில் திருச்செங்கோடு அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம் வழியாக செல்லலாம்.

இங்கு அர்த்தனாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளதால், அனைத்து தரப்ப மக்களும் மலையில் உள்ள அர்த்தனாரீஸ்வரரை சாமி கும்பிட்டுவிட்டு வரும் வழியில் சப்த கன்னிகளை வழிபட்டு செல்வார்கள். இங்கு தை மாதம் நடத்தப்படும் கண்ணகி திருவிழாவன்று அனைத்த திருக்கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். சப்த கன்னிமார்கள் கிராம தெய்வங்களாகவும், பரிவார தெய்வங்களாக உள்ளதால், முதன்மை தெய்வத்தை வழிபட்டுவிட்டு தான் இந்த தெய்வங்களை வழிபடுகின்றனர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum