தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முப்பெரும் தேவியர் ஸ்தோத்திரம்

Go down

முப்பெரும் தேவியர் ஸ்தோத்திரம் Empty முப்பெரும் தேவியர் ஸ்தோத்திரம்

Post  birundha Sun Feb 10, 2013 9:13 pm

* பராசக்தி நீயே! இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறாய். அகில உலகம் அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழ்பவளே! உன்னையன்றி, எனக்கு ஆதரவு தருபவர் யார் இருக்கிறார்கள்? ஏதாவது வழிகாட்டி என்னைக் கடைத்தேறச் செய்வாய். வேதங்கள் போற்றும் தாயே! உன் திருவடிகளைப் பணிந்து போற்றுகிறேன்.
* என் உயிர் போன்றவளே! தாயே! கலைவாணியே! கலைகளுக்கு எல்லாம் தலைவியாக இருப்பவளே! ஆணிமுத்தினைப் போன்று அறிவி�னையே மாலையாக்கிச் சூடியிருப்பவளே! காணுகின்ற காட்சியெல்லாம் நிறைந்திருப்பவளே! உன் மலரடிகளைப் பணிந்தேன்.
* பொன்போன்று ஒளிர்பவளே! நாராயண மூர்த்தியின் துணைவியே! புகழின் உச்சியே! மின்னும் நவரத்தினம் போன்று மேனி அழகுள்ளவளே! அன்னையாக இருந்து உலகத்தை ஆதரிப்பவளே! திருமகளாகிய லட்சுமியே! உன் பொற்பாதங்களைச் சரணடைகிறேன்.
* மலையிலே பிறந்தவளே! சங்கரனாரை மணந்தவளே! உலகத்தின் ஆதாரமே! அன்பர்களை ஆதரித்து உயர்வாழ்வு அருள்பவளே! உன் தாமரைப் பாதங்களை எங்கள் தலைமேல் தாங்கி வாழ்வதே பிறவிப்பயனாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum