தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாதகருக்குப் பொறுமை தேவை

Go down

சாதகருக்குப் பொறுமை தேவை Empty சாதகருக்குப் பொறுமை தேவை

Post  birundha Sat Feb 09, 2013 8:41 pm

* பூனைக்கு எவ்வளவு உணவு கொடுத்தாலும், எத்தனை அன்பு பாராட்டினாலும் நாம் கவனிக்காத போது பதார்த்தங்களைத் திருடிவிடும். அதுபோல், மனம் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும், திசை மாறி விடுவதற்கு வாய்ப்புண்டு. அதனால் மனதைச் செம்மைப்படுத்த எப்போதும் ஜபம், தியானம் போன்றவற்றில் விடாது பழக வேண்டும். நடக்கும் போதும், அமரும் போதும், வேலையில் ஈடுபடும் போதும் தைலதாரை போல விடாது இறைநாமங்களை ஜபிக்க வேண்டும்.
* தன்னை வேரோடு வெட்டிக் கொண்டிருப்பவனுக்கும் மரம் நிழலைத் தருகிறது. அதுபோல, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட சாதகர் தன்னை துன்புறுத்துவோரையும் பொறுக்கும் குணமுடையவராக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆன்மிகப் பயணத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பது தெளிவாகும்.
* நீதிமன்றத்தில் நாம் சந்திக்கும் வழக்கை எதிர்த்து வெற்றி பெற எவ்வளவோ பாடுபடுகிறோம். திரைப்படம் பார்க்க கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் வாங்க எவ்வளவோ சிரமப்படுகிறோம். இப்படி அற்பமானவையெல்லாம் நமக்கு முக்கியமாகத் தெரிகிறது. இந்த ஆர்வத்தை ஆன்மிக வாழ்வில் காட்டினால் என்றைக்கும் அழியாத பேரின்பத்தை அனுபவிக்கலாம்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  நமக்குத் தேவை பொறுமை
» குழந்தைகளுக்கான உணவு ஊட்டறீங்களா? பொறுமை தேவை….
» பொறுமை பெருமை தரும்
» பொறுமை தரும் லாபம்
» ் கடலளவு கஷ்டமும் காணாமல் போகும்குளித்தலை ஒருசமயம் தூம்ரலோசனன் எனும் அரக்கன் நீண்ட தவமிருந்து பல அரிய வரங்களை சிவ பெருமானிடமிருந்து பெற்றான். அந்த கர்வத்தினால் மூவுலக ஜீவராசிகளையும் வதைக்கவும், துன்புறுத்தவும் தொடங்கினான். பொறுமை இழந்த ஜீவராசிகள் சிவத்த

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum