தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூரிய பகவான்

Go down

சூரிய பகவான்  Empty சூரிய பகவான்

Post  meenu Sat Feb 09, 2013 12:52 pm


(செம்பருத்திப் பூவின் நிறம் உடையவன். கச்யபரின் புதல்வன், மிகவும் பிரகாசம் உடையவன், இருட்டின் பகைவன் எல்லாப் பாவங்களையும் அளிப்பவன், அப்பகலவனைப் பணிகிறேன்.)
பிரமன் – விஷ்ணு-சிவன் என்ற மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவும், கண்ணாரக் காணக் கொடிய ஏக மூர்த்தியாகவும் விளங்குபவன் சூரியன்.
ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் எவன்? என்ற கேள்விக்கு யட்சப்பிரச்சன்த்தில் விடை தரப்படுகிறது. அவன் சூரியனே என்று.
கதிரவன் நிலைபெறும் இடம் எது? என்பது மற்றொரு கேள்வி. அதற்கு விடை- சத்யம் எனும் பிரமாதம் ரூபத்தில் கதிரவன் நிலைபெறுவான் என்பது.
ஆன்மான்வைப் பிரதிபலிப்பவன் சூரியன், ஜோதிட சாஸ்திரத்தின்படி நவக்கிரகங்களில் சூரியனே அரசன். ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால் சூரிய பலம் ஜாதகத்தில் அமையவேண்டும்.
ஆதித்ய ஹிருதய மந்திரத்தால் இராமன், இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான் என்பது இராமாயணத்தின் கூற்று.
வேத மந்திரங்களின் தலை சிறந்த மந்திரம், காயத்ரி, காயத்திரிக்கு உரியவன் கதிரவன்
சூரிய நமஸ்காரம் என்று ஒரு விசேட வழிபாடு முறை உண்டு. இதைச் செய்வதன் மூலம் சரீர பலமும் ஆன்மீக பலமும் அடைய முடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை.
ஜனன லக்னம் என்பது ஜாதகத்தில் முக்கியமான முதல்பாவம் அல்லவா? இந்த பாவத்திற்குக்காரகன் சூரியன், சுயநிலை, சுயஉயர்வு, செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராக்ரமாமா, சரீர சுகம், நன்னடத்தை, நேத்திரம், உஷ்ணம், ஒழி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரகன் சூரியன்.
சூரியனே பிதுர்காரகன் என்பதை நாம் அறிவோம்.
சூரியனது குணம்சாத்வீக குணம் தாமிர உலோகத்திற்கு உரியவன். இருண்ட சிவப்பு அவனது நிறம். உடல் எலும்புக்கு உரியவன் கதிரோன் உடல்கார்ப்புச் சுவைக்குச் சூரியனது நிலையே உரைகல்.
கீழ்த்திசை கதிரவன் திக்கு ஆகும். சமஸ்கிருத மொழியில் திரந்த அறிவு சூரிய பலத்தால் உண்டாகும். இந்தச் சூரியன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் ராஜரீக வாழ்வு உண்டாகும். க்ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவன் சூரியன் என்பது ஜோதிடசாஸ்திர முடிவு.
சாம, தான, பேத, தண்ட உபாயங்களில் தண்ட உபாயம் சூரியனைச் சார்ந்தது. அக்னியை அதிதேவதையாகக் கொண்டவன் ஆதவன்.
ஆண்-பெண்-அலி என முப்பிரிவில் ஆண் கிரகம் ஆவான் ‘ஆதித்தன். ஓர் ஆண்மகனது ஜாதகத்தில் சுரியபலம் ஒங்கியிருந்தால் ஆண்மை என்னும் ஆற்றலில் அவன் சிறந்து விளங்கத் தடையிராது. ஒரு பெண்மணியின் ஜாதகத்தில் சூரிய பலம் சிறப்பாக இருந்தால் ஆக்ரஷன சக்தி ஏற்படும். சிறந்த கற்புடையவளாகத் திகழ்வாள்.
சூரியனது சொந்த வீடு சிம்மம், உச்ச வீடு மேஷம், நீச வீடு துலாம், ரிஷபம், மகரம், கும்பம் மூன்றும் பகை வீடுகள்.
சூரியனுக்குச் சந்திரன், செவ்வாய், குறு மூவரும் நண்பர்கள் ஜாதகத்தில் தான் இருக்குமிடத்திலிருந்து 7-ம் இடத்தை முழுப்பார்வையாகப் பார்க்கும் ஆற்றல் கதிரவனுக்குண்டு.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் என்று மூன்று நக்ஷத்திரங்களுக்கும் நாயகன் சூரியன்.
பாபக் கிரகங்களை ஒருவனாக இடம் பெற்றிருந்தாலும் இந்த சூரியனுக்கு உன்னதமான ஆற்றலும் பொறுப்பும் உண்டு என்பது நிச்சயம்.
தலைமை ஸ்தானத்தில் சூரியனை வைத்துக் கணிக்கப்படுகிற கணிதமுரைக்குச் சூரிய சித்தாந்தம் என்று பெயர். செளரமானம் என்பது இவ்வகைக் கணித அடிப்படையைக் கொண்டது.
வேதத்தில் சூரிய மந்திரங்கள் சிறப்பாக் இருக்கின்ற நீ மகான! வெற்றியுடையவன் என்கிறது யஜீர் வேதம். எங்களைத் தீ வினைகளிலிருந்து மீட்பாயாக் என்று வேண்டுகோள் விடுக்கிறது சாமவேதம்.
நவக்கிரக் கீர்த்தனங்களை இயற்றிய தீக்ஷிதர். சூரியமூர்த்தே நமேச்தே என்று தொடங்கிப் பாடுகிறார். சூரியனே கிரகங்களில் சிறந்தவன் என்றும் சுய ஒழி படைத்தோன் என்றும் போற்றுகிறார் இவர்.
ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் எழு சந்தங்களை ஏழு குதிரைகாகக் கொண்டு பூட்டிப் பவனி வருகிறான் இந்த பகலவன்.
ஞாயிறு போற்றும்! என்று நாவார முழக்கி, அந்தச் சுடர் கடவுளின் அருளை வேண்டிபிரார்த்தனை செய்வோம். சூரியனார் கோவிலில் மூலவர் ஒளிவீசுகிறார். உஷாதேவி, சாயாதேவி ஆகிய தேவியருடன் விளங்குகிறார். அக்னி இவருக்கு அதிதேவதை ருத்ரன் இவருக்குப் பிரத்யாதி தேவதை வாகனம் ஏழு குதிரைகள் பூட்டிய இரத்தத்தில் காணப்படுகிறார். இவரது ராசி சிம்மம்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum