தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிறைபுத்தரிசி பூஜை: சபரிமலை நடை திறப்பு

Go down

நிறைபுத்தரிசி பூஜை: சபரிமலை நடை திறப்பு  Empty நிறைபுத்தரிசி பூஜை: சபரிமலை நடை திறப்பு

Post  meenu Thu Feb 07, 2013 4:21 pm

இ‌ன்று நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுவதை ஒ‌ட்டி சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை இன்று ‌சிற‌ப்பாக நட‌க்‌கிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தினார். நேற்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்ப‌ட்டு, 5.15க்கும் 6.15க்கும் இடையே நிறை புத்தரிசி பூஜை நடத்தப்ப‌ட்டது. புதிதாக அறுவடை செய்து எடுத்த நெற்கதிர்கள் கொண்டு வரப்பட்டு அதில் புனித நீர் தெளிக்கப்ப‌ட்டது.

பின்னர் தந்திரி, மேல்சாந்தி மற்றும் பூசாரிகள் நெற்கதிர்களை தலையின் மீது சுமந்து கோயிலை வலம் வந்து ஸ்ரீகோயிலுக்குள் கொண்டு செ‌ன்ற‌ர். இந்த நெற்கதிர்கள் ஐயப்பனுக்கு சமர்ப்பிக்கப்படும். தொடர்ந்து நெற்கதிர்களை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள். இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum